ஐபிஎல் ஒரே டீம்ல ஆடிட்டு.. ஜோ ரூட் எனக்கு அப்படி பண்ணினத தாங்க முடியல – துருவ் ஜுரல் ஓபன் பேட்டி

0
190
Jurel

இந்திய அணி வீரர் துருவ் ஜுரல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆண்டர்சன் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தன்னிடம் நடந்து கொண்ட முறை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்ததாக கூறியிருக்கிறார்.

குறிப்பாக ஜோ ரூட் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் துருவ் ஜுரல் ஜோ ரூட் இணைந்து விளையாடிய சக வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ராஞ்சி டெஸ்டில் நடந்த சம்பவம்

ஜோ ரூட் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டிக்கு பிறகு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ராஞ்சி மைதானத்தில் விளையாடினார். அந்த போட்டியில் இந்திய அணி திடீரென விக்கட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது. அப்பொழுது குல்தீப் யாதவ் உடன் இணைந்து 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த போட்டியில் இந்திய அணி வெல்வதற்கு காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

இந்த போட்டியில் நடைபெற்ற சம்பவம் குறித்துக் கூறிய துருவ் ஜுரல் “என்னுடைய இரண்டாவது மேட்ச் ராஞ்சியில் நல்ல முறையில் சென்று கொண்டிருந்தது. திடீரென விக்கெட்டுகள் கொட்ட ஆரம்பித்தது. நான் பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் வந்த ஆண்டர்சன் ‘நான் உங்கள் வீடியோக்களை பார்த்து இருக்கிறேன் இது உங்களுடைய ஆட்ட முறை கிடையாது’ என்று பேசினார்”

- Advertisement -

“நான் இதற்கு நிச்சயம் திருப்பி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்பொழுதுதான் ஆண்டர்சன் என்னுடன் பேசாமல் அமைதியாக இருப்பார் என்று நினைத்தேன். நான் ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடி பிறகு அவரை தாக்கி விளையாட வேண்டும் என்று தோன்றியது. மேலும் நான் சோயப் பஷிரை அடித்து விளையாட முடிவு செய்தேன். அவர் என்னுடைய ஸ்லாட்டில் வீசினால் என்னை யாராலும் தடுக்க முடியாது என்பது எனக்கு தெரியும்”

ஜோ ரூட் செய்தது அதிர்ச்சியாக இருந்தது

மேலும் பேசிய துருவ் ஜுரல் “அன்றைய போட்டி நாளுக்கு பிறகு என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. புதிய பந்து எடுப்பதற்கு இன்னும் சில ஓவர்கள் இருந்ததால் பழைய பந்தில் தாக்கி ரன்கள் எடுக்க வேண்டுமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அடுத்தது நான் புதிய பந்தில் 36 ரன்கள் எடுத்தேன்”

இதையும் படிங்க : 183 ரன்.. கூலிங் கிளாஸ் ஸ்ரேயாஸ் சாம்சன் மெகா சொதப்பல்.. 2வது நாளிலேயே உறுதியான தோல்வி.. படிக்கல் போராட்டம்

“நான் விளையாடிய பொழுது ஆண்டர்சன் மட்டும் இல்லாமல் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜோ ரூட் எல்லோரும் ஆக்ரோஷமாக இருந்தார்கள். ஜோ ரூட் என்னுடன் ஐபிஎல் தொடரில் இணைந்து விளையாடி இருக்கிறார். ஆனாலும் அவர் என்னை ஸ்லெட்ஜிங் செய்தார். எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. நான் அவரிடம் என்னிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் இப்பொழுது நான் நாட்டிற்காக விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -