நாங்க அந்த விஷயத்தை மறந்துட்டோம்.. இப்ப மொத்த சிஎஸ்கே டீம் பிளான் இதுதான் – ரகானே பேட்டி

0
96
Rahane

ஐபிஎல் தொடரில் 2023 ஆம் ஆண்டுக்கான மினி ஏலத்தில் மூத்த வீரர் ரகானே சிஎஸ்கே அணி 50 லட்ச ரூபாய்க்கு வாங்கியது. இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பை இழந்த அவரை டி20 கிரிக்கெட்டுக்கு சிஎஸ்கே அணி நம்பியது. சிஎஸ்கே அணி அவர் மீது வைத்த நம்பிக்கையை கடந்த ஐபிஎல் தொடரில் அவர் பெரிய அளவில் காப்பாற்றினார். சிஎஸ்கே அணியும் சாம்பியன் ஆனது.

மேலும் கடந்த வருடம் அவர் சிஎஸ்கே அணியின் சிறப்பாக விளையாடியதால், 2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் வாய்ப்பை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் இவரே அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராகவும் இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் கேப்டனாக இருந்து மும்பை மாநில அணியை வழிநடத்தி எந்த ஆண்டு ரஞ்சி டிராபியை கைப்பற்றி இருக்கிறார். மேலும் அந்தத் தொடரை முடித்துக் கொண்டு தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இணைந்து வழக்கம் போல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மூன்றாவது வீரராக களம் இறங்கும் இவர், அந்த நேரத்தில் அணிக்கு என்ன தேவையோ அதை தன் அனுபவத்தை பயன்படுத்தி மிகச் சிறப்பாக செய்கிறார்.

சிஎஸ்கே அணி கடைசிப் போட்டியை டெல்லியிடம் விசாகப்பட்டினம் மைதானத்தில் தோற்று இருந்தது. அந்த போட்டியில் சிஎஸ்கே விளையாடும் பொழுது ஆடுகளம் பந்து வீச்சுக்கு மிக சாதகமாக இருந்தது. இதன் காரணமாக சிஎஸ்கே பேட்ஸ்மேன்களால் பவர் பிளேவில் ரன்கள் எடுக்கவில்லை முடியவில்லை. ஆனால் ரகானே தனித்து விளையாடி 45 ரன்கள் எடுத்தார். மேலும் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாட இருக்கிறது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் ரகானே பேசும்பொழுது “நீங்கள் இந்த பயணத்தில் போட்டியில் வெற்றி பெறுவீர்கள் இல்லை தோல்வி அடைவீர்கள். ஆனால் ஒரு தனி நபராகவும், உங்கள் அணியினரை நம்புவதும் பாசிட்டிவாக இருப்பதும் மிகவும் முக்கியம். ஒவ்வொரு ஆட்டத்திலும் நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் மேலும் ஒவ்வொரு ஆட்டத்தில் இருந்தும் நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி பாய் இல்லாம எப்படி?.. அவர் சொன்ன அந்த விஷயம் தான் நேத்து நான் பினிஷ் பண்ண உதவி செய்தது – ஷஷான்க் சிங் பேட்டி

நீங்கள் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு சதவீதம் முன்னேற்றத்தையாவது அடைந்து இருக்க வேண்டும். அதுதான் மிகவும் முக்கியமானது. ஒரு அணியாக நாங்கள் மிகவும் நம்பிக்கை உடன் இருக்கிறோம். நாங்கள் விசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட தோல்வியை மறந்து விட்டோம். அதிலிருந்து கிடைத்த கற்றல்களை எடுத்துக்கொண்டு ஹைதராபாத் போட்டியை எதிர் நோக்குவதற்கு வந்திருக்கிறோம். இன்று தாங்கள் எங்களுடைய அமைதியான கண்ணோட்டத்துடன், புதிய போட்டிக்கு தயாராகி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.