5 தோல்வி.. இன்னும் சிஎஸ்கேக்கு பிளே ஆப் வாய்ப்பு.. ஆர்சிபி போன வருஷம் செஞ்சத செஞ்சா மட்டும் போதும்.. முழு விபரம்

0
317

கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து சிஎஸ்கே அணி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்களை சேர்த்தது. இதனை 10.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து கேகேஆர் அணி எளிதாக சேஸிங் செய்தது.

சிஎஸ்கே பிளே ஆஃப் சான்ஸ்

தோனி கேப்டனாக திரும்பிய போதும் சிஎஸ்கே அணியால் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியவில்லை. அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி முதல்முறையாக தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி தொடர்ந்து 5 போட்டிகளில் தோற்பதும் இதுவே முதல்முறையாகும்.

- Advertisement -

மொத்தமாக 6 போட்டிகளில் ஆடியுள்ள சிஎஸ்கே அணி ஒரு வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளதா என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் சிஎஸ்கே அணியால் தற்போதும் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

ஆர்சிபி செய்த மேஜிக்

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் விளையாடுகின்றன. இதுவரை சிஎஸ்கே அணி 6 போட்டிகளில் வென்றுள்ள நிலையில், இன்னும் 8 போட்டிகளில் விளையாட வேண்டிய சூழல் உள்ளது. இந்த 8 போட்டிகளில் 6ல் வென்றால் கூட சிஎஸ்கே அணியால் எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிட முடியும் என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -

கடந்த சீசனில் ஆர்சிபி அணியின் தொடக்கமும் இப்படிதான் மோசமாக இருந்தது. ஆனாலும் கடைசி 8 போட்டிகளில் 6ல் வென்று என்ஆர்ஆர் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 2015ஆம் ஆண்டு மும்பை அணியும் முதல் 6 போட்டிகளில் 5ல் தோல்வியடைந்தது. ஆனால் பின்னர் நடந்த எழுச்சியால் கோப்பையையே வென்று சாதித்தது.

- Advertisement -