சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை நடைபெற உள்ள போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இனி சிஎஸ்கே அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் சிஎஸ்கே குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
சென்னை சன்ரைசர்ஸ் மோதல்
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான செயல்பாடு காரணமாக புள்ளிகள் பட்டியலில் தற்போது பத்தாவது இடத்தில் இருக்கிறது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை அணி 6 போட்டிகள் தோல்வி அடைந்து ரன் ரேட்டிலும் மோசமான நிலையில் இருக்கிறது. இனி நல்ல ரன் ரேட்டில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று குறித்து நினைத்துப் பார்க்க முடியும்.
ஆனால் சென்னை அணியில் அந்த அளவிற்கு போட்டியை வெற்றி பெற்று தரக்கூடிய நபர்கள் பெரிய அளவில் இல்லாதது அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் நாங்கள் 6 போட்டிகளில் அனைத்து போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்றால் அனைவரும் சிரிக்கிறார்கள் எனவும், அந்த நம்பிக்கை எங்களுக்கு இருப்பதாக சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதை சொன்னா எல்லாரும் சிரிக்கிறாங்க
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “6ல் போட்டிகளில் 6லும் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது. ஆனால் அதைப் பார்த்து சிலர் சிரிப்பார்கள். ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதற்கான வரைபடத்தை ஒரு வருடத்திற்கு முன்பே அமைத்தது. எனவே இன்னும் ஒரு வாய்ப்பு இருந்தாலும் அடுத்தடுத்து வரும் போட்டிகளில் சிறந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்கிற விஷயத்தில் நாங்கள் ஒரு கண் வைத்திருக்கிறோம்.
இதையும் படிங்க:சொந்த மண்ணில் ஜெயிக்க.. விராட் கோலிக்கு இந்த விஷயத்தை மட்டும் ஆர்சிபி கொடுத்தா போதும் – ஆகாஷ் சோப்ரா கருத்து
ஆனால் அது எங்களுக்கு சரியாக கை கொடுக்கவில்லை என்றால் இந்த மோசமான சீசனை நாங்கள் இன்னும் அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம்” என்று பிளம்மிங் கூறியிருக்கிறார். சென்னை அணியைப் போலவே சன் ரைசர்ஸ் அணியும் 8 போட்டிகளில் ஆறு போட்டிகள் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் அடுத்த சுற்றில் நீடிக்க இனி வரும் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனவே நாளை எந்த அணி ஜெயிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.