பாகிஸ்தான் தேர்வுக்குழு மிக மோசமான முடிவுகளை எடுத்து வருவதாகவும், அவர்களை விட தக்காளி வெறுப்பவர்களுக்கு அதிக விஷயங்கள் தெரியும் எனவும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2023 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் இருந்து படுமோசமான தோல்விகளை சந்தித்து கொண்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை பாபர் அசாம் தலைமையில் வீழ்த்திய பொழுது, பாகிஸ்தான் கிரிக்கெட் மீண்டும் வளர ஆரம்பித்திருப்பதாக பேசப்பட்டது.
சமீபத்திய தோல்விகள்
பாகிஸ்தான் அணி சமீபத்தில் தங்களது சொந்த மண்ணில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்தது. இது மிகப்பெரிய அளவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்கள் மீது விமர்சனங்களை உண்டாக்கியது. இதைத் தொடர்ந்து சொந்த மண்ணில் நடத்திய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 6 நாட்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது.
இதற்கு அடுத்து தற்போது நியூசிலாந்து சி அணிக்கு எதிராக நியூசிலாந்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி மூன்றையும் தோற்று இருக்கிறது. முன்னணி வீரர்கள் இல்லாத நியூசிலாந்து அணி வெகு எளிதாக முன்னணி வீரர்களுடன் விளையாடிய பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது விமர்சனங்களை இன்னும் அதிகரித்து இருக்கிறது.
தக்காளி விற்பவருக்கு அதிகம் தெரியும்
இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறும் பொழுது “பாகிஸ்தான் தேர்வுக்குழு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அவர்களுக்கு உண்மையில் அணிகளை எப்படி உருவாக்க வேண்டும்? என்று தெரியாது. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து இதுவரையில் தொடர்ந்து பாகிஸ்தான் அணி தோல்விகளை சந்தித்து வருகிறது. இவர்களை விட தக்காளி விற்பவருக்கு அதிக விஷயங்கள் தெரியும். நீங்கள் ஏன் சாம்பியன்ஸ் டிராபியில் ஒரே ஒரு ஸ்பின்னரை மட்டும் அணியில் தேர்வு செய்தீர்கள் என அவர்கள் கூட கேட்கிறார்கள்?”
இதையும் படிங்க : ஐபிஎல்-ல் இருக்கும் பட்லருக்கு நடந்த சோகம்.. இங்கிலாந்து அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு.. திடீர் நீக்கம் ஏன்?
“தற்போது பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவராக இருக்கும் ஆகிப் ஜாவேத் உடனடியாக பதவி விலக வேண்டும். இவர்கள் இன்னும் 4 மாதங்கள் பாகிஸ்தான் தேர்வுக குழுவில் இருந்தார்கள் என்றால், பாகிஸ்தான அணி மீண்டும் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியடையும் நிலைக்கு தள்ளப்பட்டு விடும்” என்று கவலை தெரிவித்து இருக்கிறார்.