நேபாளத்தை தோற்கடித்து இந்திய போட்டி பற்றி பாபர் அசாம் அதிரடி பேச்சு.. எகிறும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு.. சூடுபிடிக்கும் ஆசிய கோப்பை!

0
12817
Babar

இன்று துவங்கிய ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 248 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது!

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் அதிரடியாக குவித்தது. பாகிஸ்தான் அணிக்கு அந்த அணியின் கேப்டன் பாபர் ஆஸம் 131 பந்துகளில் 151 ரன்கள் குவித்தார். இவருடன் இணைந்து 214 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைய காரணமாக இருந்த இப்திகார் அகமது 71 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 101 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பெரிய இலக்கை நோக்கி விளையாடிய அனுபவம் இல்லாத நேபாள் அணி 23.4 அவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்களுக்கு சுருண்டது. ஆனாலும் கூட அந்த அணிக்கு இது ஒரு நல்ல அனுபவ பாடமாக அமைந்திருக்கும். பெரிய அணிகளுக்கு எதிராக இப்படியான போட்டிகள் சிறிய அணிகளுக்கு கிடைக்காது.

இந்த போட்டியில் பாபர் ஆஸம் தனது 19ஆவது ஒருநாள் சதத்தை அடித்தார். இதன் மூலம் மிகக் குறைந்த போட்டிகளில் 19வது சதத்தை அடித்த சர்வதேச வீரர் என்ற உலகச் சாதனையை படைத்தார். இந்த போட்டியில் அவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் பாபர் ஆஸம் “நான் உள்ளே சென்று பேட்டிங் செய்த பொழுது பந்து வரவே இல்லை. நானே பந்தை தேடி சென்று விளையாடினேன். ஆடுகளத்தில் பந்து இரண்டு விதமான வேகத்தில் வந்தது. நானும் ரிஸ்வானம் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று பார்த்தோம். பின்னர் பல்வேறு கட்டங்கள் இருந்தது. ரிஸ்வான் எனக்கு நம்பிக்கை அளித்தார்.

- Advertisement -

அடுத்து இப்திகார் வந்ததும் நாங்கள் வித்தியாசமான கிரிக்கெட்டை விளையாடினோம். அவர் செட் ஆவதற்கு முன்பு கொஞ்ச நேரம் கஷ்டப்படலாம். எனவே அவரை அவரது இயல்பான ஆட்டத்தை ஆடச் சொன்னேன். இரண்டு மூன்று பவுண்டரிகளுக்கு பிறகு அவர் வசதியாக உணர்ந்தார். 40 ஓவர் களுக்குப் பிறகு அவர் அதிரடியில் ஈடுபட்டார்.

எங்களுடைய பந்துவீச்சில் நான் திருப்தி அடைகிறேன். நாங்கள் ஆரம்ப சில ஓவர்களில் இலக்கை எட்டவில்லை. வேகப்பந்துவீச்சாளர்கள் நன்றாக துவங்கினார்கள். ஸ்பின்னர்களும் தாக்கினார்கள். இந்த ஆட்டம் இந்தியாவிற்கு எதிராக விளையாடுவதற்கு முன்பாக நல்ல பயிற்சியாக இருந்தது. ஏனென்றால் இது எங்களுக்கு நல்ல நம்பிக்கையை அளித்து இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் 100% தர நினைக்கிறோம். அடுத்து இந்தியாவுக்கு எதிராகவும் இதையே தொடர்வோம்!” என்று கூறியிருக்கிறார்!