இந்தியா மற்றும் இலங்கையில் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கு தற்பொழுது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆசிய தகுதிச்சுற்றில் ஹாங்காங் அணிக்காக விளையாடும் இந்தியாவில் பிறந்த ஆயுஷ் சுக்லா நான்கு மெய்டன் ஓவர்கள் வீசி உலக சாதனை படைத்திருக்கிறார்.
ஆயுஸ் சுக்லா மும்பையில் பால்கர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். பின்பு கிரிக்கெட்டுகாக தன்னுடைய 21 வது வயதில் ஹாங்காங் அணிக்கு தன்னை முழு நேர வீரராக மாற்றிக் கொண்டார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் மங்கோலி அணிக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மூன்றாவது வீரராக உலக சாதனை படைத்து பட்டியலில் இணைந்திருக்கிறார்.
மூன்றாவது வீரர்
ஆயுஸ் சுக்லா வலதுகை வேகப்பந்துவீச்சாளர். மங்கோலிய அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரை வீசி ரன் ஏதும் கொடுக்காமல் ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து மூன்று ஓவர்களையும் வீச முடிவு செய்து, தொடர்ச்சியாக நான்கு ஓவர்களையும் ரன் ஏதும் கொடுக்காமல் மெய்டன் ஓவர்களாக வீசி சாதனை படைத்தார்.
இதற்கு முன்பாக கனடாவின் ஷார்ட் பின் ஜாபர் மற்றும் நியூசிலாந்தின் லாக்கி பெர்குசன் இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நான்கு ஓவர்களையும் ரன் ஏதும் கொடுக்காமல் மெய்டனாக வீசி உலக சாதனை படைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் லாக்கி பெர்குசன் இந்த வருடம் டி20 உலக கோப்பை தொடரில் இந்த சாதனையை படைத்தார். பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக நான்கு ஓவரை மெய்டனாக 3 விக்கெட்டும் கைப்பற்றினார்.
ரோகித் சர்மாவின் விக்கெட்
இந்த ஆங்காங் பந்துவீச்சாளர் ஆய்வு சுற்றுலா 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கு முன்பு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவர் 3 ஓவர்கள் மெய்டனாக வீசியும் இருக்கிறார்.
இதையும் படிங்க : தோனி என் ஐடியல்.. ஆனால் விராட் கோலி செஞ்ச அதை மறக்கவே மாட்டேன்.. அற்புதம் – சிஎஸ்கே சமீர் ரிஸ்வி பேட்டி
இந்த போட்டியில் 14.2 ஓவரில் மங்கோலியா அணி 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து விளையாடிய ஹாங்காங் அணி வெறும் 1.4 ஓவரில் போட்டியை முடித்து விட்டது. இந்த வகையில் அதிவேகத்தில் ரன் சேஸ் செய்யப்பட்ட போட்டியாக இது உலக சாதனையில் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.