உருவத்தில் மட்டுமல்ல குணத்திலும் பெரிய ஆள்தான்.. தமிழக வீரர்களை ஊக்கப்படுத்த.. சிஎஸ்கே வீரர் செய்த காரியம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

0
225

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகள் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே வீரர் எதிர்கால தமிழக வீரர்களை ஊக்கப்படுத்த செய்த காரியம் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

- Advertisement -

சிஎஸ்கே வீரரின் செயல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஆன சிவம் துபே தமிழக விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் ஆண்டு விருதுகள் மற்றும் உதவித்தொகை விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் உடன் கலந்து கொண்டார். அப்போது தமிழக விளையாட்டு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக 10 எதிர்கால தமிழக வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை ஊக்கம் அளிக்கும் விதமாக 30000 ரூபாய் வழங்குவதாக அறிவித்தது.

இந்த நிலையில் இதில் கலந்து கொண்ட சிஎஸ்கே வீரர் சிவம் தூபே எதிர்கால வீரர்களை ஊக்கப்படுத்த ஒவ்வொருவருக்கும் தலா 70000 ரூபாய் தான் வழங்குவதாக அறிவித்திருக்கிறார். இது தமிழகத்தில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தான் செய்த சிறிய உதவியாக இருக்கட்டும் என சில முக்கிய விஷயங்கள் சிஎஸ்கே வீரர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

ரசிகர்கள் பாராட்டு மழை

இதுகுறித்து சிவம் தூபே விரிவாகக் கூறும்போது “நான் சிஎஸ்கே அணி ஹோட்டலில் இருந்து விழா நடக்கும் இடத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்த போது, டிஎன்சிஏ செயலாளர் ஆன டாக்டர் பாபா இங்குள்ள சில திறமையான இளைஞர்களுக்கு உதவுவதற்கான முயற்சி என்று என்னிடம் கூறினார். இது அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் நிச்சயம் அமையும். இந்த சிறிய விஷயம் அவர்களுக்கு மேலும் கடினமாக பாடுபடவும் நாட்டிற்குப் பெருமை சேர்க்கவும் கூடுதல் உந்துதலை அளிக்கின்றன.

இதையும் படிங்க:15 வயசு ரோஹித்தை பார்த்த மாதிரி இருக்கு.. பேட்டிங்கை விட இதுக்காகவே ஆயுஸ் பெரிய ஆளா வருவார் – ரோஹித் சிறுவயது கோச்

மும்பையில் இதே போல ஊக்கம் அளிக்கும் விஷயங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் மற்ற மாநிலங்களில் இது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை” என்று தூபே பேசியிருக்கிறார். இந்த தகவலை அறிந்த சிஎஸ்கே வீரர்கள் சிவம் துபேவின் செயல்பாட்டை பெருமளவில் பாராட்டி வருகிறார்கள். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இனி வருகிற 6 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் நிலைமையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிவம் தூபே போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி சிஎஸ்கே அணியை வெற்றிகளுக்கு அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -