2025 ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு தாம் கூறிய கருத்துகள் தவறாக புரிந்துகொள்ள பட்டதாக இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்தார். மூன்றாவது போட்டிக்கு முன்பாக, இந்த தொடருக்காக’அதிகமாக தயாரானோம்’ என்று பேசியது மெக்கல்லம் விளக்கம் அளித்தார்.
இரண்டாவது டெஸ்டுக்கு இங்கிலாந்து அணி ‘அதிகமாக தயாரானது’ என்று பிரெண்டன் மெக்கல்லம் கூறியிருந்தார். இது குறித்து பேசிய அவர், “அதிகமாக தயாரானோம் என்று சொன்னது, அதிகமாக உழைத்தோம் என்று அர்த்தமல்ல. அதிகமாக உழைப்பது வெற்றியை உத்தரவாதப்படுத்தாது.
” நீண்ட நேரம் உழைப்பதும் வெற்றியை உத்தரவாதப்படுத்தாது. நாங்கள் அதிகமாக தயாரானோம் என்று சொன்னது, ஐந்து தீவிரமான பயிற்சி செஷன்கள் நடத்தினோம். விளையாடும் திறனில் சற்று குறைவாக விட்டுவிட்டோம். அந்த ஆடுகளத்தில் வேறு வகையான ஆட்டம் தேவைப்பட்டது”என்று மெக்கல்லம் கூறினார்.
புத்துணர்ச்சி தேவை:
“மனரீதியாக புத்துணர்ச்சி தேவை. உடலரீதியாக புத்துணர்ச்சி தேவை. பெர்த்தில் கடினமான தோல்விக்குப் பிறகு ஐந்து தீவிரமான பயிற்சி செஷன் செய்தும், அது சிறந்த வாய்ப்பை தந்துவிடவில்லை என்று நினைக்கிறேன். அதை நான் ஏற்றுக்கொள்வேன். பயிற்சியாளராக அதை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி. கவனம் மற்றவர்கள் மீது இல்லாமல் என் மீது இருப்பது நல்லது” என்று அவர் கூறினார்.
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டையும் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவது போட்டிக்கு செல்லும் போது, தொடர் தோல்வியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி அழுத்தத்தை எதிர்கொள்ளும். தனது பதவி குறித்து பேசிய அவர், “தெரியவில்லை, ஆனால் உண்மையைச் சொல்ல போனால் அது என்னை அதிகம் தொந்தரவு செய்யவில்லை.
பயிற்சி அளிக்கிறேன்:
நீங்கள் செய்வதில் உறுதியான நம்பிக்கை இருந்தால், என்ன நடக்கிறதோ அது நடக்கட்டும். நிச்சயமாக வேலை பாதுகாக்க பயிற்சி அளிப்பதில்லை. மக்களிடமிருந்து சிறந்ததை பெறுவதற்காக பயிற்சி அளிக்கிறேன்.” என்றார். மூன்றாவது டெஸ்டில் சிறந்த கிரிக்கெட் ஆடினால் பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதை தொடர்வோம் என்று மெக்கல்லம் கூறினார். மூன்றாவது டெஸ்ட் டிசம்பர் 17 புதன்கிழமை அடிலெய்டு ஓவலில் தொடங்கவுள்ளது.






