இன்று இலங்கை அணிக்கு எதிராக துவங்க இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் 52 ரன்கள் எடுத்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் முதல் வீரராக மெகா சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார்.
தற்பொழுது இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளையும் வென்று இங்கிலாந்து தொடரை கைப்பற்றி விட்டது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஜோ ரூட் 2 சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி செய்த முடிவு
அசல் கிரிக்கெட் வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவதன் மூலமாகவே கிரிக்கெட்டைக் காப்பாற்ற முடியும் என்கின்ற காரணத்தினால், டெஸ்ட் கிரிக்கெட்டை சுவாரசியப்படுத்தவும், ரசிகர்களை டெஸ்ட் கிரிக்கெட் பார்க்க மைதானத்திற்கு வரவழைக்கவும் முதன் முதலில் 2019 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி அறிமுகப்படுத்தியது.
இதுவரை முழுமையாக நடைபெற்ற முடிந்திருக்கும் இரண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் முதல் முறை நியூசிலாந்து அணி சாம்பியனாகவும் இரண்டாவது முறை இங்கிலாந்து அணி சாம்பியன் ஆகவும் வந்திருக்கிறது. இந்த இரண்டு முறையும் இந்த இரண்டு அணிகளுடன் இறுதி போட்டியில் இந்திய அணி மோதி தோல்வி அடைந்தது.
ஜோ ரூட்டுக்கு காத்திருக்கும் மெகா சாதனை
இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு முதல் ஜோ ரூட் 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களிலும் சேர்த்து இதுவரையில் 4948 ரன்கள் எடுத்திருக்கிறார். மேற்கொண்டு ஜோ ரூட் 52 ரன்கள் எடுப்பதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் முதல்முறையாக 5000 ரன்கள் குவித்த வீரர் என்கின்ற மெகா சாதனையைப் படைப்பார். மேலும் இந்த குறுகிய காலத்தில் ஜோ ரூட் 17 சதங்களுடன் 5000 ரன்களை நெருங்கி இருக்கிறார் என்பது ஆச்சரியப்படுத்துகிறது.
இதையும் படிங்க : சரியான சம்பவம் இருக்கு.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்குதான்.. காரணம் இதுதான் – தினேஷ் கார்த்திக் திட்டவட்டம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்
ஜோ ரூட்-4948
மார்னஸ் லாபுசேன் – 3904
ஸ்டீவ் ஸ்மித் – 3486
பென் ஸ்டோக்ஸ் – 3101
பாபர் ஆசம் – 2725
ஐந்து வீரர்கள் கொண்ட இந்த பட்டியலில் ஒரு இந்திய வீரரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது