மீண்டும் மும்பை அணிக்கு அம்பதி ராயுடு.. பாண்டியாவுக்கு அடுத்து மும்பை இந்தியன்ஸ் அதிரடி!

0
517
Ambati

உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற டி20 லீக் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த இரண்டு அணிகளும் அரசர்களாக விளங்கி வருகின்றன.

இதுவரை நடைபெற்ற 16 ஐபிஎல் தொடர்களில் இந்த இரண்டு அணிகளும் தலா ஐந்து முறை ஐபிஎல் தொடரை வென்று, மற்ற அணிகளுக்கு ஆறு முறை மட்டுமே ஐபிஎல் தொடர் சாம்பியனுக்கான வாய்ப்பைக் கொடுத்திருக்கின்றன.

- Advertisement -

இப்படியான ஐபிஎல் தொடரில் இந்த இரண்டு சாம்பியன் அணிகளுக்கும் விளையாடி மொத்தமாக ஆறு முறை ஐபிஎல் தொடரை வென்ற அணிகளில் இடம் பெற்றிருந்த வீரராக அம்பதி ராயுடு மட்டுமே இருக்கிறார்.

ஆரம்பத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் கண்டெடுக்கப்பட்ட அம்பதி ராயுடு மிகச் சிறப்பான ஆட்டத்தை அந்த அணிக்காக வெளிப்படுத்தினார். மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று முறை ஐபிஎல் தொடரை வென்று இருக்கிறார்.

இதற்கு அடுத்து ஏலத்திற்கு வந்த அம்பதி ராயுடுவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018 ஆம் ஆண்டு வாங்கியது. அப்பொழுது அவரை துவக்க வீரராக பயன்படுத்தி மகேந்திர சிங் தோனி அற்புதமாக அவரை பயன்படுத்தினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் அவர் மூன்று முறை ஐபிஎல் தொடரை வென்ற வீரராக இருக்கிறார்.

- Advertisement -

மேலும் யாருக்கும் இல்லாத அளவுக்கு மிகச் சிறப்பாக ஐபிஎல் தொடரில் இருந்து அவர் ஓய்வும் பெற்றுக் கொண்டார். இந்த வருடம் மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் ஆனதோடு, அம்பதி ராயுடுவின் ஐபிஎல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

மேலும் ஆந்திர அரசியலில் ஒரு முக்கியமான கட்சியில் இணைந்து இருந்த அம்பதி ராயுடு இன்று அந்தக் கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக செய்திகள் வெளி வந்திருந்தது.

இதுகுறித்து அம்பதி ராயுடு ட்விட்டரில் எழுதும் பொழுது ” நான் அம்பதி ராயுடு! வரும் ஜனவரி 20 முதல் துபாயில் நடைபெறும் ஐஎல்டி டி20 லீக்கில் மும்பை எமிரேட்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்த இருக்கிறேன். தொழில்முறையாக விளையாட்டுகளில் ஈடுபடும்போது நான் அரசியல் ரீதியாக சம்பந்தமில்லாமல் இருக்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!