தோனியின் 18 வருட பிரம்மாண்ட சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ்.!

0
1874

தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது . ஆசியக் கோப்பை க்கு தயாராகும் விதமாக நடைபெறும் இந்த ஒரு நாள் போட்டி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் மிகச் சிறப்பாக விளையாடி 300 ரன்களை குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான இப்ராஹிம் ஜத்ரான் மற்றும் ரஹ்மத்துல்லா குர்பாஸ் இருவரும் இணைந்து துவக்க விக்கெட்டிற்கு 227 ரன்களை சேர்த்தனர்.

- Advertisement -

இது பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஓபனிங் ஜோடி சேர்த்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முதல் இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் மற்றும் ட்ராவஸ் ஹெட் ஜோடி 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 284 ரன்கள் குவித்தது சாதனையாக இருக்கிறது . இரண்டாவது ஒருநாள் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய ரஹ்மத்துல்லா குர்பாஸ் 151 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 151 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருக்கு துணையாக நின்று விளையாடிய இப்ராஹிம் ஜதுரான் என்பதன்களில் ஆட்டம் இழந்தார். இறுதியில் முஹம்மது நபி அதிரடியாக விளையாடிய 29 ரன்கள் எடுக்க 50 ஓவர்களில் 300 ரன்கள் எட்டியது ஆப்கானிஸ்தான்.

இதனைத் தொடர்ந்து 31 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் இமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாம் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வலுவான நிலையில் இருந்தது. இறுதிக்கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இரண்டு ஓவர்களில் 27 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய சதாப் கான் 49 ஆவது ஓவரில் 16 ரன்களை விலாசினார். இதனால் இறுதி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளரான நசீம் ஷா இரண்டு பவுண்டரிகளை அடித்து அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான அணி கடுமையாக போராடி மீண்டும் ஒரு தோல்வியை பாகிஸ்தானிற்கு எதிராக பதிவு செய்திருக்கிறது. இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய ரஹ்மத்துல்லா குர்பாஸ் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான மகேந்திர சிங் தோனியின் 18 வருட கால சாதனையை முறியடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் எடுத்த ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 151 ரன்கள் குவித்தார். இது ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக எடுத்திருக்கும் அதிகபட்ச ரன்னாகும். இதற்கு முன்பு இந்திய அணியின் உன்னால் கேப்டனான மகேந்திர சிங் தோனி 2005 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் வைத்து நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் எடுத்த 148 ரன்கள் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த அதிகபட்ச ரண்களாக இருந்தது இந்த சாதனையை 18 வருடங்களுக்குப் பிறகு தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரஹ்மத்துல்லாஹ் முறியடித்திருக்கிறார்.

இதன்மூலம் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி விளையாடிய அவர் 45 வது ஓவரில் ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் குர்பாஸ் விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.