“ஆப்கானிஸ்தானிடம் கிரிக்கெட் அதிகம்.. அரசியல் கம்மி.. பாகிஸ்தான் மாதிரி இல்ல!” – டேனிஷ் கனேரியா பகீர் குற்றச்சாட்டு!

0
306
Afghanistan

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் மிகவும் சிக்கலான காலக்கட்டத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் திடீரென சுமாராக மாறியதும், ஏற்கனவே தொடர்ச்சியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்குள் இருந்து வரும் அரசியலும், தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட்டை மிகவும் சிக்கலாக மாற்றி இருக்கிறது.

பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி உள்நாட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது வரை, வெற்றிகள் வந்து கொண்டிருக்கும் வரை,பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு மற்றும் அணிக்குள் இருந்த பிரச்சனைகள் வெளியில் தெரியாமல் இருந்து வந்தன. மேலும் நிலைமைகள் சுமுகமாக இருப்பது போல தோன்றின.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி ஆசியக் கோப்பைத் தொடர் விளையாட இலங்கை வந்த பிறகு, குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் நீண்ட வடிவமான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை விளையாட வந்ததும், பாகிஸ்தான் அணியின் பலவீனங்கள் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது.

பாகிஸ்தான் அணியின் பலவீனங்கள் வெளிப்பட்டு தோல்வி வர ஆரம்பித்ததும், பாகிஸ்தான் அணிக்குள் மற்றும் அமைப்புக்குள் இருந்த பிரச்சனைகளும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்தன. இந்த நிலையில் உலககோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி கடைசி நான்கு போட்டிகளை தோற்றதோடு அதில் ஆப்கானிஸ்தான் அணி இடமும் தோற்றதும், பிரச்சனைகள் பூதாகரமாக மாறிவிட்டன.

தற்பொழுது பாகிஸ்தான் அணியின் மேலாண்மை பொறுப்பில் இருந்த மூத்த முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் தன்னுடைய பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாபர் அசாமை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விடுவோம் என்று அச்சுறுத்தி வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறும்பொழுது “ஆப்கானிஸ்தான் அணி கிரிக்கெட்டில் அதிகம் கவனம் செலுத்தி அரசியலில் குறைவாக கவனம் செலுத்தும் வேளையில், பாகிஸ்தானை அணி புவிசார் அரசியலில் அதிகம் கவனம் செலுத்தி, கிரிக்கெட்டில் குறைவான கவனம் செலுத்துகிறது.

தற்பொழுது அணி மோசமாக செயல்பட்டு கொண்டிருக்கும் பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கேப்டனை நீக்குவோம் என்று தொடர் அச்சுறுத்தல் தந்துக்கொண்டு இருப்பது, அது கிரிக்கெட் வீரர்களின் மன உறுதியை குறைக்கிறது. மேலும் இது அணி தேர்வில் குளறுபடி இருக்கும்போது நடப்பதால் இன்னும் சிக்கலாகிறது.

மேலும் பாபர் அசாமின் தனிப்பட்ட வாட்ஸ்அப் ஷாட்கள் வெளியில் கசிந்து இருக்கின்றன. அணி மற்றும் வீரர்களின் மேலாண்மையில் ஈடுபட்ட இன்சமாம் உல் ஹக் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார். பாகிஸ்தான் அணி மோசமான கட்டத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திலும் பெரிய மாற்றங்கள் வரவேண்டிய நேரம் இது!” என்று கூறியிருக்கிறார்!