இந்திய டி20 தொடர்.. ஆப்கானிஸ்தான் அணியில் திடீர் திருப்பம்.. 19 பேர் கொண்ட அணி அறிவிப்பு

0
4216

இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் 11ஆம் தேதி தொடங்குகிறது. டி20 உலக கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்பு கடைசியாக இந்தியா விளையாடும் ஒரே தொடர் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய அணி நேற்று அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த அணியில் உள்ள சீனியர் வீரர்களுக்கும் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

- Advertisement -

இதனால் நவீன் உல் ஹக், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் அனைவருமே இடம் பிடித்திருக்கிறார்கள். அனுபவ வீரர் இப்ராஹிம் சாரன் இந்த தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்ட அஸ்மதுல்லா இந்த தொடரில் சாதாரண வீரராக தான் விளையாடுகிறார். ஆப்கானிஸ்தான் அணியில் இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், இக்ராம் அலிகில், ரஹ்மத் ஷா, முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், அஸ்மத்துல்லா உமர்சாய், ஷரபுதீன் அஷ்ரப், முஜிப் உர் ரஹ்மான், ஃபசல்ஹாக், ஃபரூக், நவூக் ஃபரூக்கி, அஹ்மத், எம். சலீம், கைஸ் அகமது, குல்பாடின் நைப், ரஷித் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அனுபவமும் இளம் வீரர்களும் கலந்த கலவையாக இந்த அணி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி தற்போது கத்துக்குட்டி போல் இல்லாமல் பலம் வாய்ந்த அணிகளுக்கே தண்ணி காட்டுகிறது. இதனால் இந்திய வீரர்கள் இந்த தொடரை சாதாரணமாக நினைத்து விடக்கூடாது.

- Advertisement -

முதல் டி20 போட்டி வரும் 11ஆம் தேதி மொகாலியிலும் இரண்டாவது t20 போட்டி வரும் 14ஆம் தேதி இந்தூரிலும், மூன்றாவது t20 போட்டி வரும் 17ஆம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் மாலை ஏழு மணிக்கு இந்திய நேரப்படி தொடங்குகிறது.