முன்னாடி எம்எஸ் தோனி கிட்ட பார்த்த அந்த விஷயத்தை.. இப்போ பவுமா கிட்ட பாக்குறேன் – ஏபி டிவில்லியர்ஸ்

0
18

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராக திகழ்ந்த டிவில்லியர்ஸ் கேப்டனின் அரிதான குணம் குறித்து சில முக்கிய கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறது. இதற்கு தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா முக்கிய காரணமாக திகழ்கிறார். அவர் கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து 12 போட்டிகளில் 11 போட்டிகள் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. மேலும் அவரது தலைமையில் ஒரு டெஸ்ட் போட்டி கூட தோற்காத அணியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான ஏபி டிவில்லியர்ஸ் அஸ்வின் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளிக்கும் போது, தென் ஆப்பிரிக்கா கேப்டன் இந்திய முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் குணத்தை கொண்ட நபராக இருக்கிறார் என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “என்னிடம், பவுமா பேசும் போது இதற்கு முன்னர் அவர் விளையாடாத பாகிஸ்தான் டெஸ்டில் தென்னாபிரிக்க அணி தோல்வி அடைந்திருக்கக் கூடாது என்று பேசினார். இருப்பினும் அந்த டெஸ்டில் அவர் விளையாடவில்லை. ஆனால் அவர் எங்களை முற்றிலும் ஆச்சரியப்படுத்தும் நபராக இருந்தார். அவர் கேப்டனாக நியமிக்கப்பட்ட சில ஆண்டுகளில் பல ஆண்டுகள் தொடர்பிலிருந்த என் நண்பர்களோடு அவரைப் பற்றி கருத்து தெரிவிப்பதில் சற்று தயங்கினேன். இருப்பினும் இது ஒரு பழைய சொற்றொடர்க்கு திரும்பிப் பார்க்கும்போது ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மட்டும் மதிப்பிடக் கூடாது என்பது தெளிவாக தெரிந்தது. அவர் முன்னாள் கேப்டன் ஸ்மித் போல மிரட்டும் தோனியில் இல்லாமல் இருப்பவராக இருக்கலாம்.

இதையும் படிங்க:WPL 2026 ஏலத்தில் கவனம் ஈர்த்த 16 வயது வீராங்கனை.. டாப் 3 விலை போன வீராங்கனைகள்

தற்போதைய கேப்டன் மிகவும் சின்ன மனிதராக இருக்கலாம். மேலும் ஒரு மென்மையாக பேசக்கூடிய மனிதர். அவர் எப்போதும் குரல் எழுப்ப மாட்டார். ஆனால் அவரது கேப்டன்ஷிப்பில் எல்லாவிதமான பாணிகளும் கை கொடுக்கிறது. ஒருவேளை அந்த காலத்தில் கூட தோனிக்கும் இதே மாதிரியான அமைப்பு இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர் அதிகம் பேச மாட்டார்,நான் அவரது குரலை பெரும்பாலும் கேட்டது இல்லை. ஆனால் தோனி பேசும் போது மக்கள் அவரைக் கேட்கிறாங்க. ஒருவேளை டெம்பாவுக்கும் எதிர்காலத்தில் இதேபோன்று நடக்கலாம்” என்று தோன்றுகிறது என அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -