பந்து வீச்சாளர் பந்துவீசி முடிக்கும் முன், பந்துவீச்சாளர் முனையில் நிற்கும் பேட்ஸ்மேன், கிரீசை தாண்டி வெளியே சென்றால், பந்து வீச்சாளர் பந்து வீசுவதை நிறுத்திவிட்டு அவரை ரன் அவுட் செய்யலாம். சில மாதங்களுக்கு முன்பு இந்த ரன் அவுட் முறைக்கு மன்கட் என்று ஒரு இந்திய வீரரின் பெயரும், இப்படி செய்வது விளையாட்டின் உத்வேகத்தை பாதிக்கும் என்று பரவலான கருத்தும் இருந்தது.
தற்பொழுது ஐசிசி இந்த முறையில் செய்யப்படும் ரன் அவுட்டை இனி மன்கட் ரன் அவுட் என அழைக்கக் கூடாது என்றும், ரன் அவுட் என மட்டுமே அழைக்க வேண்டும் என்றும், இது தவறான ஒரு வழிமுறை அல்ல என்றும் விதிகளைத் திருத்தி இருந்தது. ஆனாலுமே இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சமீபத்தில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தீப்தி சர்மா இப்படி ரன் அவுட் செய்ததற்கு இங்கிலாந்து தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் இப்பொழுது வரை வந்து கொண்டுதான் இருக்கிறது என்பது தனி. இப்படி ரன் அவுட் செய்ய வாய்ப்பு கிடைத்து அந்த வாய்ப்பை பயன்படுத்தாத 6 பிரபல வீரர்களைப் பற்றிதான் இந்தக் கட்டுரை தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம்.
2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அஸ்வின், ராஜஸ்தான் அணியின் வீரர் ஜாஸ் பட்லரை இந்த முறையில் ரன் அவுட் செய்தார். ஆனால் 2020ஆம் ஆண்டு பெங்களூர் அணி வீரர் ஆரோன் பின்ச்சை இப்படி ரன் அவுட் செய்ய வாய்ப்பு கிடைத்தும் செய்யவில்லை.
1987 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில், வெஸ்ட் இண்டீஸ் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில், பாகிஸ்தான் வீரர் சலீம் ஜாபரை இப்படியான முறையில் ரன் அவுட் செய்யாமல் தவிர்த்தார் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் கோர்ட்னி வால்ஷ்!