33 வயது நட்சத்திர வீரர் திடீர் ஓய்வு.. ஆசியா கப் முன்பாக இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு.!

0
3972

பதினாறாவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஹைபிரிட் முறையில் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி துவங்கும் இந்த போட்டியில் ஆறு அணிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன.

லீக் போட்டிகள் சூப்பர் ஃபோர் சுற்றி மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 13 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும் ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் வைத்து நடைபெற இருக்கிறது.

- Advertisement -

ஆசியக் கோப்பை போட்டிகள் துவங்குவதற்கு முன்பாகவே இலங்கை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அந்த அணியின் முக்கியமான வீரர் ஒருவர் திடீர் ஓய்வு முடிவை எடுத்திருக்கிறார். இது இலங்கை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

33 வயதான இலங்கை அணியின் லகிரு திரிமானே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று திடீரென அறிவித்திருக்கிறார். இவரது ஓய்வு முடிவு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இலங்கை அணிக்காக ஓபனிங் பேட்ஸ்மேன் ஆகவும் மிடில் ஆர்டரிலும் விளையாடிய இவர் 2014 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2010 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான இவர் 2022 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இடது கை ஆட்டக்காரரான திரிமானே 44 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக ஆடி இருக்கும் இவர் 2088 ரன்களை எடுத்து இருக்கிறார். இதில் மூன்று சதங்களும் 10 அரை சதங்களும் அடங்கும் .

- Advertisement -

127 ஒரு நாள் போட்டிகளில் ஆடி இருக்கும் லகிரு திரிமானே 3164 ரன்களை எடுத்துள்ளார். இதில் 21 அரை சதங்களும் 4 சதங்களும் அடங்கும். 26 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் 291 ரன்கள் எடுத்திருக்கிறார். பகுதி நேர பந்துவீச்சாளராக ஒரு நாள் போட்டிகளில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ஓய்வு குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த இவர்’ இலங்கை அணிக்காக விளையாடி இது மிகவும் பெருமையான ஒரு தருணம். கடந்த சில வருடங்களாக எனது தாய் நாட்டிற்காக விளையாடியதற்கு பெருமைப்படுகிறேன். கிரிக்கெட் எனக்கு நிறைய விஷயங்களை கொடுத்திருக்கிறது. நான் என்னுடைய திறமைக்கு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாமல் சிறந்த வகையில் ஆடியதாகவே நினைக்கிறேன் . சிலை எதிர்பாராதவிதமான காரணங்களால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுக்கிறேன் . அந்தக் காரணங்களை என்னால் தற்போது வெளிப்படையாக கூற இயலாது. எனக்கு வாய்ப்பளித்த மற்றும் எனக்கு ஆதரவாக இருந்த கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கும் எனது ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறி இருக்கிறார்.