இந்தியாவுக்கு 231 ரன் இலக்கு.. இரட்டை சதத்தை தடுத்தார் பும்ரா.. முதல் டெஸ்டில் வெற்றி பெறுவது யார்?

0
235
Bumrah

இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் போப், இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியை மிகவும் சுவாரசியமான கட்டத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுக்க, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 436 ரன்கள் எடுத்து 190 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

இதற்கு அடுத்து 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு தனி ஒரு வீரராக நின்று 196 ரன்கள் எடுத்துக் கடைசி விக்கட்டாக வெளியேறிய போப், இங்கிலாந்து அணி 420 ரன்கள் குவிப்பதற்கு காரணமாக இருந்தார்.

இதன் மூலம் இந்திய அணிக்கு தற்பொழுது 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் தரப்பில் பும்ரா நான்கு, அஸ்வின் மூன்று ஜடேஜா இரண்டு அக்சர் ஒன்று என விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இங்கிலாந்து அணி நேற்று ஆறு விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்து, 126 ரன்கள் முன்னிலையுடன் இருந்தது. இன்று மேற்கொண்டு விளையாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 420 ரன்கள் குவித்து இருக்கிறது. இதன் மூலம் 230 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. தற்பொழுது இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இன்று இங்கிலாந்து அணியின் நான்கு விக்கெட்டுகளில் இரண்டு விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றினார். காலையில் ரேகான் அஹமத் விக்கட்டை முதலில் கைப்பற்றி பும்ரா ஆரம்பித்தார். மேலும் அவரே போப் விக்கெட்டை கடைசியாக கைப்பற்றி ஆட்டத்தையும் முடித்து வைத்தார்.

இதையும் படிங்க : “இது முட்டாள்தனமானது.. 2 கையிலும் பந்து வீச அனுமதிக்க வேண்டும்” – ஹர்ஷா போக்லே பீட்டர்சன் மோதல்

இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் போப் 278 பந்துகளில் 21 பவுண்டரிகள் கூட 196 ரன்கள் எடுத்தார். இந்தியாவில் மூன்றாவது இன்னிங்ஸில் வெளிநாட்டு வீரர் ஒருவர் 196 ரன்கள் குவிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. தற்பொழுது இந்த போட்டி மிகவும் சுவாரசியமான கட்டத்தில் இருக்கிறது. ஒருவேளை இங்கிலாந்து வெல்லும் என்றால் அவர்களுக்கு மிகச் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வெற்றி இதுவாகவே இந்திய துணை கண்டத்தில் அமையும்!