“யார் சொன்னா பார்ட் டைம் பவுலர் இல்லனு?.. இவர் 140 கி.மீஅடிச்சா வேற மாதிரி!” – இந்திய பவுலிங் கோச் செம நியூஸ்!

0
6841
ICT

கிரிக்கெட் மிக வேகமாக மாற்றம் அடைந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகுவதில் கூட பெரிய மாற்றங்கள் உண்டாகி இருக்கிறது. இந்த நிலையில் குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டிகள் மிகுந்த மாற்றத்தை சந்தித்து வருகின்றன!

இந்த வகையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்கள் பேட்டிங் செய்ய வேண்டிய தேவை அதிகரித்து இருக்கிறது. அதேபோல் பேட்ஸ்மேன்கள் ஒன்று இரண்டு ஓவர்கள் வீச வேண்டிய தேவையும் உருவாகி இருக்கிறது.

- Advertisement -

இப்படி இரண்டும் சேர்ந்த கலவையாக இருக்கும் அணிகள்தான், தற்போதைய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்கின்ற நிலை உருவாகி இருக்கிறது.

இங்கிலாந்து கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய வெள்ளைப்பந்து அணியை 11 வீரர்களும் பேட்டிங் செய்யக்கூடிய அளவில் அமைக்க முடியும். அதே அணியில் குறைந்தது 7 வீரர்கள் பந்து வீசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

தற்பொழுது இங்கிலாந்தை பார்த்து ஆஸ்திரேலியா அணியும் தனது பாணியை அதே வகைக்கு மாற்றி இருக்கிறது. தற்போது உலகக் கோப்பைக்கு வரை இருக்கும் ஆஸ்திரேலியா அணியின் எட்டாவது இடத்தில் கேமரூன் கிரீன் இல்லை மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் விளையாடும் அளவுக்கு மிக வலுவாக இருக்கிறார்கள்.

- Advertisement -

இதே இந்திய அணியை எடுத்துக் கொண்டால் ஆல்ரவுண்டர்கள் தாண்டி பந்துவீச்சாளர்கள் குறிப்பிட்ட பேட்டிங் பங்களிப்பை தரக்கூடிய வகையில் இல்லை. அதேபோல் பேட்ஸ்மேன்கள் ஒன்று இரண்டு ஓவர்களை நடுவில் வீசி உதவி செய்யக் கூடிய வகையில் இல்லை. இந்தக் காரணத்தினால் பதினோரு பேரில் ஒரு வீரரை பந்துவீச்சாளராகவே சேர்க்க வேண்டிய தேவை அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக பேட்டிங் நீளம் குறைகிறது. இது இந்திய அணியின் பிரச்சனையாக இருந்து வருகிறது.

இதற்கு தற்போது பதில் அளித்துள்ள இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மகாம்ப்ரே “நீண்ட காலமாக உழைத்து ஹர்திக் பாண்டியாவை பந்துவீச்சில் வடிவமைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் அவருடைய பணிச்சுமையை நிர்வகித்து வருகிறோம். நாங்கள் அவருடைய உடல் தகுதியையும், நாங்கள் அவரிடம் இருந்து எதிர்பார்ப்பதையும் பெற முடியும் என்பதை உறுதி செய்கிறோம்.

ஒருமுறை பந்தை அவர் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் அடிப்பார் என்றால், அந்த இடத்தில் அவர் வித்தியாசமான பந்துவீச்சாளராக இருப்பார். அணியின் கண்ணோட்டத்தில் ஹர்திக் பாண்டியா எங்களுக்கு விக்கெட் டேக்கர்.

திலக் வர்மாவின் அண்டர் 19 காலத்தில் இருந்து நான் அவருடன் பணியாற்றி வருகிறேன். நாங்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்த பொழுது அவருக்கு அவருக்கு பந்து வீசும் திறன் இருக்கிறது என்பதை உணர்ந்தோம்.

அப்பொழுது இருந்து நாங்கள் அவரை பந்துவீச்சில் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம். அவர் ஒரு ஓவரை வீசுவார் என்று கேப்டனுக்கு நம்பிக்கை இருந்தால், அது இரண்டு ஓவராக கூட அதிகரிக்கலாம். ஆனால் இது கூடுதல் பந்துவீச்சாளர் தேவைப்படும் சூழ்நிலையை பொறுத்தது!” என்று கூறியிருக்கிறார்!