“நாங்களே பெரிய ஸ்பின் டீம்தான்.. இந்தியா ஸ்பின்னர்ஸ் பற்றி பயம் இல்லை!” – ஆப்கான் கேப்டன் அதிரடி பேட்டி!

0
437
Afghanistan

நாளை இந்திய அணி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது!

ஆப்கானிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் தரம்சாலா மைதானத்தில் பங்களாதேச அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்திருக்கிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது.

- Advertisement -

நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதன் மூலம் புள்ளி பட்டியலில் தங்களை கொஞ்சம் மேலே தூக்கி வைத்துக் கொள்ள முடியும். மேலும் நல்ல ரன் ரேட் கிடைக்கும் பொழுது, அது கடைசி நேரத்தில் மிகவும் முக்கியமானதாக இருக்கும். எனவே இந்த போட்டி சந்தேகத்திற்கு இடமின்றி முக்கியமான போட்டி.

பங்களாதேஷ் அணிக்கு எதிராக தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, மெஹந்தி ஹசன் மிராஸ் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகியோரது சுழற் பந்துவீச்சில் சிக்கி திடீரென சரிந்து பரிதாபமாகத் தோற்றது.

இந்த நிலையில் நாளை உலகத் தரமான ஸ்பின்னர்களை கொண்டுள்ள இந்திய அணிக்கு எதிராக விளையாட வேண்டி இருக்கும் என்பது குறித்து, ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகிதி இடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

- Advertisement -

இந்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய ஆப்கான் கேப்டன் “நாங்கள் தினமும் சிறந்த பின்னர்களான ரஷீத், நபி, முஜீப், நூர் முகமது இவர்களை வலைகளில் விளையாடிக் கொண்டிருக்கிறோம். எங்கள் அணி ஸ்பின் பந்துவீச்சை விளையாடுவதில் சிறப்பான அணி என்று நான் நினைக்கிறேன்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் போராடினோம் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் அந்த ஒரு ஆட்டத்தின் அடிப்படையில் நீங்கள் எங்களை சுழற் பந்துவீச்சுக்கு எதிராக ஆட வரவில்லை என்று சொல்ல முடியாது.

அந்த ஒரு ஆட்டம் போய்விட்டது. அவ்வளவுதான் முடிந்தது. நாங்கள் ஸ்பின்னர்களை சிறப்பாக விளையாட முடியும் என்று எங்களுக்கு தெரியும். அடுத்த ஆட்டத்தில் நாங்கள் மீண்டு வர முயற்சி செய்வோம்.

எங்களுக்கு நம்பிக்கை குறைபாடு எதுவும் ஏற்படவில்லை. எங்களால் ஆட்டத்தை வெல்ல முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே எங்களால் அடுத்த ஆட்டத்திலேயே வெற்றி பெற முடியும். அதற்கு நாங்கள் கடுமையாக முயற்சி செய்வோம்!” என்று கூறியிருக்கிறார்!