3வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி அரை சதம் – குழந்தை வமிக்காவுடன் கொண்டாடிய வீடியோ இணைப்பு

0
197
Virat Kohli Fifty Celebrating With Vamika

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது. 2-0 என்கிற கணக்கில் தொடரை தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றிய நிலையில் இறுதிப்போட்டியான மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 10 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது. தென்ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டீ காக் 124 ரன்கள் குவித்து அசத்தினார். 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. அணியின் கேப்டன் கே எல் ராகுல் ஆரம்பத்திலேயே 9 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

பின்னர் விராட் கோலியுடன் இணைந்த ஷிகர் தவான் சிறப்பாக விளையாட தொடங்கினார். இந்த இரு ஜோடியும் மிக நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஷிகார் தவான் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரிஷப் பண்ட் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாக, விராட் கோலியும் 65 ரன்கள் எடுத்த நிலையில் தற்போது ஆட்டமிழந்தார். தற்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் குவித்து சற்று இக்கட்டான நிலையில் உள்ளது.

உற்சாகமாக கொண்டாடிய விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் அவரது குழந்தை வாமிகா

விராட் கோலி 84 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் குவித்து கேஷவ் மகாராஜா பந்தில் ஆட்டமிழந்தார். போட்டியில் விராட் கோலி 50 ரன்கள் குவித்தவுடன், அனைத்து இந்திய அணி வீரர்களும் அவளுடைய அரைசதத்தை கொண்டாடினார். களத்தில் நின்ற விராட் கோலியை தன்னுடைய அரைசதத்தை தன்னுடைய பெண் குழந்தையான வாமிகாவிற்கு சமர்ப்பித்தார்.

இதுநாள் வரையில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் குழந்தையான வாமிகாவை யாரும் பார்க்காதபடி அவர்கள் இருவரும் ரகசியம் காத்தனர். பல்வேறு முறை பத்திரிக்கையாளர்கள் அவருடைய குழந்தையை புகைப்படம் எடுக்க போகும் வேளையில், விராட் கோலி புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று வேண்டிய காட்சிகளைக் கூட நாம் இதற்குமுன் பார்த்திருப்போம்.

- Advertisement -

ஆனால் இன்று முதல் முறையாக விராட் கோலி அரை சதம் குவித்தவுடன், அவருடைய மனைவி அனுஷ்கா ஷர்மா குழந்தை வாமிகாவை கையில் வைத்துக் கொண்டு தன் கணவரின் அரை சதத்தை சந்தோஷமாக கொண்டாடினார். மைதானத்தில் இருந்த விராட் கோலியை அனுஷ்கா சர்மா வாமிகாவிற்கு சுட்டிக் காண்பிக்க, அவருடைய குழந்தையை வாமிகாவும் தன்னுடைய தந்தையைப் பார்த்து சிரித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

32 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து உள்ள இந்திய அணி, மீதமுள்ள 18 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற நெருக்கடியான நிலையில் உள்ளது. களத்தில் தற்பொழுது 16* ரன்கள் எடுத்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரும்,1* ரன் எடுத்த நிலையில் சூர்யகுமார் யாதவும் விளையாடி வருகின்றனர்.