ரன் அவுட்டை கண்டு கொள்ளாமல், நடு ஆடுகளத்தில் பேசிக் கொண்டிருந்த பஞ்சாப் வீரர் அர்ஷ்தீப் சிங் – வீடியோ இணைப்பு

0
1426
Arshdeep Singh Run Out

2022 ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 32-வது போட்டி, மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்தில், ரிஷாப்பின் டெல்லி அணிக்கும், மயங்க்கின் பஞ்சாப் அணிக்கும் இடையே, ஒரு குறைந்த ரன் போட்டியாக நேற்று நடைபெற்று முடிந்தது.

டெல்லி அணியைக் கொரோனா தாக்கி, ஆல்ரவுண்டர் மிட்ச்செல் மார்ஷ் உட்பட, அணி ஊழியர்கள் சிலர் பாதிக்கப்பட்டிருக்க, போட்டி நடக்குமா நடக்காதா என்ற நிலையில், போட்டி மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்துக்கு மாற்றப்பட்டு, திட்டமிட்டபடி நடந்தது.

- Advertisement -

முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி பஞ்சாப் அணிக்குத் துவக்கம் தர வந்த, கேப்டன் மயங்க் அதிரடியாகத் ஆரம்பித்து, ஓரளவு நல்ல துவக்கத்தையே தந்தார்.

ஆனால் லலித் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் ரிஷாப்பிடம் கேட்ச் தந்து தவான் வெளியேற, ஆரம்பித்தது பஞ்சாப்பின் சரிவு. பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன், ஷாரூக்கான் என மிடில் ஆர்டரில் ஒருவரும் நிலைக்கவில்லை. டெல்லி அணியின் பவுலிங்கை நன்றாக இருந்ததை விட, பஞ்சாப் அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது.

இதனால் 19 ஓவரில் 9 விக்கெட்டுகள் போயிருக்க, 20வது ஓவரில் முதல் பந்தை விட்டு, இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்து, அடுத்த மூன்று பந்தைகளை தவறவிட்டார் அர்ஷ்தீப் சிங். கடைசி பந்தையும் கீப்பருக்கு போகவிட்டு, ரன் ஓட முயற்சிக்க, ரிஷாப் பந்தைப் பிடித்து ரன் அவுட் செய்ய வர, அர்ஷ்தீப் ரன் அவுட்டை பற்றி அலட்டிக்கொள்ளாமல், நடு ஆடுகளத்தில் நின்று, எதிர்முனையிலிருந்த பைபவ் அரோராவிடம் பேசிக்கொண்டிருந்தது நகைச்சுவையாக இருந்தது!

- Advertisement -