இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்பொழுது ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.
இந்த போட்டிக்கு டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்த ஆஸ்திரேலியா அணிக்கு நான்கு பேட்ஸ்மேன்கள் அதிரடியாக அரை சதம் அடிக்க, அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது.
இதற்கு அடுத்து இந்திய அணி கொஞ்சம் கடினமான இலக்கை நோக்கி ரோகித் சர்மா உடன் வாஷிங்டன் சுந்தரோடு களம் இறங்கியது.
வாஷிங்டன் சுந்தர் முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்ந்து இருந்த நிலையில், நிதானமாக 30 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடக்கம்.
இதைத்தொடர்ந்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி, தேவையான ரன்களை எடுத்து, ஓவருக்கு ஓவர் இலக்கை நோக்கி நகர்ந்தது.
இந்த நிலையில் மேக்ஸ்வெல் ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்த ரோகித் சர்மா அடுத்த பந்தையும் நேராக அடிக்க முயற்சி செய்து அடித்தார். முகத்திற்கு நேராக வந்த பந்தை, என்ன செய்வது என்று தெரியாமல் மேக்ஸ்வெல் கையை மட்டும் வைத்தார். பந்து எதிர்பாராத விதமாக அவரது கையில் சிக்கிக் கொண்டது.
இந்த நிலையில் ரோகித் சர்மா 57 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து பரிதாபமாக ஆட்டம் இழந்தார். ஆனால் மேக்ஸ்வெல் குத்துமதிப்பாக பிடித்த கேட்ச் மட்டும் தவறி இருந்தால், அவரது முகத்தை நிச்சயம் பந்து தாக்கி இருக்கும். கடுமையான காயம் ஏற்பட்டிருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பினார்.
கேட்ச் பிடித்த பிறகு தனக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்று சைகை செய்த மேக்ஸ்வெல், பேட்ஸ்மேனுக்கு பின்னாடி இருக்கும் ஸ்ட்ரைட் ஸ்கிரீனை காட்டினார். அதில் வரும் விளம்பரங்கள், பந்துவீச்சாளரின் பார்வை மற்றும் கவனத்தை திசை திருப்புவதாக அமைகிறது. அதைத்தான் அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் இந்த விஷயம் குறித்து இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் ஏற்கனவே ஒரு முறை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். இனி வருங்காலங்களில் இரண்டு பக்கங்களிலும் நேராக விளம்பரங்கள் தவிர்க்கப்படுமா? என்று பார்க்க வேண்டும்.
Warra catch by maxwell 🔥😂
— Ahsaan Elahi (@Callme_ahsaan) September 27, 2023
Rohit played brilliantly as always pic.twitter.com/cRTtisPKv9