ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் மிகப்பெரிய போட்டி மெல்போர்ன் மைதானத்தில் சற்றுமுன் துவங்கி நடந்து வருகிறது!
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் தங்களின் முதல் போட்டியில் மோதிய போது இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்தது.
இந்த உலகக் கோப்பையிலும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் தங்களின் முதல் போட்டியில் நேரடியாக மோதிக் கொள்கின்றன. இந்த காரணத்தால் வழக்கமான இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு பரபரப்பை விட இந்த போட்டிக்கு கூடுதலாக இருக்கிறது.
இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆடுகளம் கடினமானதாகவும் புற்கள் கொண்டதாகவும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.
ஆடுகளத்தின் சாதகத்தை பயன்படுத்திக்கொண்ட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மிகச் சிறப்பாக பந்து வீசிய முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
அடுத்த இரண்டாவது ஓவரை அர்ஸ்தீப் சிங் வீச முதல் பந்திலேயே பாபர் ஆஸம் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். அவர் மேல்முறையீட்டுக்கு போன பின்பும் அது அவுட் என்று தெளிவாக உறுதியானது.
ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கிய போட்டி ஒன்றில் கடைசி நேரத்தில் அர்ஸ்தீப் சிங் ஒரு கேட்சை விட்டு ரசிகர்களின் மிகப் பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தார். தற்பொழுது அதற்கு பதிலடி தரும் விதமாக பாபர் விக்கெட்டை வீழ்த்தியதோடு ரிஸ்வான் விக்கெட்டையும் சேர்த்து வீழ்த்தி இருக்கிறார்!
Arshdeep Singh you beauty. pic.twitter.com/NIDhhWYsE7
— CricketMAN2 (@ImTanujSingh) October 23, 2022