மோசகாம விளையாடினார்கள்;ஆனால் அவங்க ரெண்டு பேரையும் திட்டாதிங்க – ரோகித் சர்மா வேண்டுகோள்!

0
869

பும்ரா மற்றும் பார்சல் பட்டேல் இருவரையும் திட்டாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ரோகித் சர்மா.

இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமனில் இருந்தது.

- Advertisement -

வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் டக்ஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கை துவங்க வந்த ஜோடியில் கேப்டன் ஆரோன் பின்ச் 7 ரன்களில் அவுட் ஆனார். ஆனால் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான இளம் வீரர் கேமரூன் கிரீன் இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தார். வெறும் 21 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுத்து ரன்களை கட்டுக்குள் கொண்டுவந்தனர். கீழ் வரிசையில் வந்த இளம் வீரர் டேவிட் ஆஸ்திரேலிய அணிக்காக தனது முதல் சர்வதேச அரை சதத்தை பூர்த்தி செய்து சரிவிலிருந்து மீட்டார். அவர் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 27 பந்தில் 54 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 186 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய அக்சர் படேல் 4 ஓவர்கள் பந்துவீசி 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல்(1), ரோகித் சர்மா(17) இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆடமிழந்த ஏமாற்றம் அளித்தனர். அதற்குப்பிறகு களம் கண்ட விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் விளாசினர். சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். இதில் தலா ஐந்து பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அடக்கம்.

விராட் கோலியும் டி20 அரங்கில் தனது 33வது அரை சதத்தை அடித்தார். 48 பந்துகளில் 63 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதில் 3 பவுண்டரி 4 சிக்ஸர்கள் அடக்கம். இறுதியில் 19.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த ரோகித் சர்மா கூறுகையில், “இந்த மைதானம் எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆன ஒன்று. இந்திய அணிக்காகவும் டெக்கான் சார்ஜர் அணிக்காகவும் இந்த மைதானத்தில் பல போட்டிகளை விளையாடியிருக்கிறேன். இந்திய அணி வெற்றி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர்கள் நன்றாக செயல்பட்டது கூடுதல் நம்பிக்கையை கொடுக்கிறது. இந்திய அணியின் பெர்ஃபார்மன்ஸ் அணியின் நிர்வாகத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. டி20 போட்டிகளில் சிறிய அளவில் தவறு செய்வது பொறுத்துக் கொள்ளப்படும். ஒட்டுமொத்தமாக நன்றாக செயல்பட்டது பெருமிதத்திற்கு உரியது.

பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் நீண்ட ஓய்விற்கு பிறகு மீண்டும் அணிக்குள் வந்திருக்கின்றனர். ஆகையால் அவர்களுக்கு இன்னும் சில போட்டிகள் நன்றாக செயல்படுவதற்கு எடுக்கலாம். அவர்களை யாரும் திட்டிவிட வேண்டாம். இன்னும் சில காலம் கொடுங்கள். நிச்சயம் அணி நிர்வாகம் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறது.” என்று தனது பேட்டியில் குறிப்பிட்டார்.