21 பந்தில் 46 ரன்கள் அடித்த தினேஷ் கார்த்திக்; ஒரு மேட்ச் என்னோட இடத்தில் ஆடவைத்தால், எனக்கே ஆப்பு அடிப்பாரு போல – சூர்யகுமார் யாதவ் பேட்டி!

0
29173

நம்பர் 4 இடத்தில் தினேஷ் கார்த்திக் விளையாடியது எனக்கே போட்டியாக இருக்கும் போல, சூர்யகுமார் யாதவ் பேட்டியளித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா உடனான மூன்றாவது டி20 போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க வீரர்களாக டி காக் மற்றும் டெம்பா பவுமா இருவரும் களமிறங்கினார்கள். இம்முறையும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தார் பாவுமா. 

- Advertisement -

இரண்டாவது டி20 போட்டியில் டக் அவுட் ஆன ரிலே ரோசோ அபாரமாக விளையாடி 48 பந்துகளில் சதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 8 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் அடங்கும். டி காக் 43 பந்துகளில் 68 ரன்கள் அளித்திருந்த இதில் நான்கு சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடங்கும். கடைசியில் வந்து மூன்று சிக்ஸர்கள் அடித்து ஐந்து பந்துகளுக்கு 19 ரன்கள் அடித்திருந்தார் மில்லர். 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்திருந்தது தென்னாப்பிரிக்கா அணி. 

இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் துவக்க வீரர்களாக களமிறங்கினர். கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் நான்கு பந்துகளில் ஒரு ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். ரிஷப் பன்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியை வெளிப்படுத்தினர். அதுவும் நீடிக்கவில்லை. 

14 பந்துகளில் 27 ரன்கள் அடித்து ரிஷப் பன்ட் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 46 ரன்கள் அடித்திருந்த போது, துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்தார். அதன் பிறகு வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி 120 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகள் இழந்திருந்தது. பின்னர் தீபக் சகர் 17 பந்துகளில் 31 ரன்கள் அடித்து நம்பிக்கை கொடுத்தார்ம் அதுவும் நீடிக்கவில்லை. 178 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. 49 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வென்றது. 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. 

- Advertisement -

முதல் இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்த சூரியகுமார் யாதவ் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது சூரிய குமார் யாதவ் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருவதால் அவரது புள்ளி விவரங்கள் மற்றும் தரவரிசை பட்டியல் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் கூறுகையில்,

“நான் எந்த புள்ளி விவரத்தையும் தெரிந்து வைத்துக் கொள்வதில்லை. அதைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. எனது நண்பர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் புள்ளி விவரங்களை எடுத்து அனுப்புவார்கள். அப்போது பார்த்து தெரிந்து கொள்வேன். நான் அதைப் பின் தொடர்வது இல்லை.” என்றார்.

தினேஷ் கார்த்திக் நம்பர் 4 இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடியது பற்றி பேசிய சூரியகுமார், “ஒரு கட்டத்தில் நான் அவருடன் பாட்னர்ஷிப் அமைத்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. என்னுடைய இடத்தில் களமிறங்கி மிகச் சிறப்பாக விளையாடியதால், தற்போது நானும் சிக்கலில் இருக்கிறேன். தினேஷ் கார்த்திக் போதிய அளவில் பந்துகளை சந்திப்பதில்லை. ஆனாலும் அவர் அபாரமாக செயல்பட்டு, குறைந்த பந்துகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார். உலக கோப்பையில் அவர் விளையாடும் போது, பார்ப்பதற்கு ஆவளுடன் இருக்கிறேன்.” என்றார்.