“ரொம்ப ஓவரா பேசிட்டிங்க.. இதே 18 மாசம் முன்ன இருந்திருந்தா..”- ராகுல் டிராவிட் வேதனை!

0
2008
Dravid

இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கு புதிய தலைவராக பொறுப்பேற்ற அஜித் அகர்கர், ஆசியக் கோப்பைக்கு 17 பேர் கொண்ட இந்திய அணியை கடந்த வாரத்தில் அறிவித்திருந்தார்!

இந்த அணியில் காயத்தில் இருந்து மீண்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்கள். இவர்கள் இருவரும் பேட்டிங் வரிசையில் நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் விளையாடக் கூடியவர்கள்.

- Advertisement -

ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்திருந்த இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியிருந்தது. இந்த தொடரில் ஒரு போட்டியை தோற்று இரண்டு போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றி இருந்தது.

இந்தத் தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, இந்திய அணியின் மிடில் வரிசை பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனை முயற்சி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா மீது விமர்சனங்கள் வெளியில் இருந்து பலமாக வைக்கப்பட்டது. மேலும் இந்தக் கூட்டணி தொடர்ந்து பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுவதாக ஒரு விமர்சனம் தொடர்ச்சியாக ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஆசியக் கோப்பைக்கு இந்திய அணி இலங்கைக்கு புறப்பட்டு சென்று இருக்கிறது. இந்த அணியில் காயத்தில் இருந்து திரும்பிய கேஎல்.ராகுல் செல்லவில்லை. மேலும் அவர் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார். தற்பொழுது இதுவும் ஒருபுறத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

இந்த நிலையில் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக பேசிய ராகுல் டிராவிட் “பரிசோதனை என்கிற இந்த வார்த்தை அதிகம் சிந்திக்கப்படாமலே தொடர்ந்து தூக்கி எறியப்பட்டு கொண்டே இருக்கிறது. நாங்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதற்காகவே எந்த புதிய முயற்சிகளையும் செய்யவில்லை. நீங்கள் ஏன் பரிசோதனை முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதற்கான சில குறிப்பிட்ட காரணங்கள் இருக்கும்.

இதற்கு உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன், பேட்டிங் வரிசையில் நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் யார் விளையாடுவார்கள் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இதுவே 18 மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தால், இந்த இரண்டு இடங்களில் ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் இந்த மூன்று பேரில் யாராவது இரண்டு பேர் விளையாடுவார்கள் என்று சொல்லி இருப்பேன். இது குறித்து எங்களிடம் அப்போது எந்த சந்தேகமும் கிடையாது.

மூவருக்குமே பெரிய காயங்கள் இருந்தது. இதையெல்லாம் முன்கூட்டியே யாராலும் கணக்கிட முடியாது. அவர்கள் மூவரும் அப்படியான இடத்திற்கு தள்ளப்பட்டார்கள். அவர்களுக்கு கட்டாயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாக இருந்தது. அவர்கள் மூவருக்குமே பலத்த காயங்கள் இருந்தது. இப்படி ஒரு சூழ்நிலையால்தான் பரிசோதனை முயற்சிகள் செய்யப்பட்டது!” என்று கூறியிருக்கிறார்!