சூர்யகுமார் அதிவேக ஆயிரம் ரன்; இந்தியா அபார ரன் குவிப்பு!

0
1010
Sky

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது மோதி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று அசாம் மாநிலம் கவுகாத்தி நகரத்தின் மைதானத்தில் இந்த தொடரின் இரண்டாவது போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அவர்கள் அணியில் சம்சி வெளியே போய் நெகிடி உள்ளே வந்திருந்தார்.

- Advertisement -

இந்திய அணியின் பேட்டிங் துவங்க வந்த கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அதிரடியில் மிரட்டினார்கள். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்க 96 ரன் குவித்தார்கள். ரோகித் சர்மா 37 பந்தில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஆட்டத்தில் மிக அதிரடியாக விளையாடிய கே எல் ராகுல் இருபத்தி எட்டு பந்தில் 55 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

107 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்த பொழுது விராட் கோலி சூரியகுமார் ஜோடி சேர்ந்தனர். இந்தப் போட்டியிலும் சூரியகுமாரின் ஆட்டத்தில் அனல் பறந்தது. வழக்கம்போல் பந்துகள் காற்றிலும் தரைவழியாகவும் எல்லைக் கோட்டை கடந்து கொண்டே இருந்தன. 18 பந்துகளில் அரைசதம் அடித்து அதிவேகமாக அரைசதம் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். மொத்தம் இருபத்தி இரண்டு பந்துகள் களத்தில் இருந்த சூரியகுமார் யாதவ் 5 பவுண்டரி 5 சிக்சருடன் 61 ரன்களை குவித்தார். இப்போது அவர் 24 ரன்கள் அடித்து இருந்த பொழுது, சர்வதேச டி20 போட்டியில் 573 பந்துகளில் வேகமாக ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். விராட் கோலி சூரியகுமார் ஜோடி மொத்தம் 102 ரன்கள் குவித்தது.

இதையடுத்து ஒரு புறத்தில் விளையாடிய விராட் கோலியும் அதிரடியில் அசத்தினார். அவர் 7 பவுண்டரி ஒரு சிக்சருடன் 28 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். கடைசியில் வந்த தினேஷ் கார்த்திக் 2 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 7 பந்துகளில் 17 ரன்கள் அடித்தார். 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் குவித்தது!

- Advertisement -