கிரிக்கெட்

உலக கோப்பையை வெல்ல கோலிக்கு பொறுப்பு கொடுங்க – ஸ்ரீகாந்த் யோசனை

- Advertisement -

2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த தொடரை இந்திய அணி வெல்லுமா என்று எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் ஸ்ரீகாந்த், பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். இந்திய அணியில் இசான் கிஷான் போல் பயமின்றி அதிரடியாக விளையாடும் வீரர் தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஷான் கிஷன் தற்போது அச்சமின்றி  விளையாடுவதாக பாராட்டிய அவர் இரட்டை சதம் இசான் கிஷன் இரட்டை சதம் விளாசுவது போல் தொடர்ந்து தொடக்க இடத்தில் அதிரடியாக ஆட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடுவதை தடுக்க  வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ள ஸ்ரீகாந்த் ,அவர்களை அவர்கள் இஷ்டத்துக்கு விளையாட விடுங்கள் என கூறியுள்ளார்.

இதேபோன்று இந்திய அணியின் பிளேயிங் லெவனின் பேட்டிங் தெரிந்த பந்துவீச்சாளரும், பந்து வீச்சு தெரிந்த பேட்ஸ்மேன்  போன்ற ஆல்ரவுண்டர்கள் அணியில் இருக்க வேண்டும் என ஸ்ரீகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய ஸ்ரீகாந்த் விராட் கோலிக்கு உலகக் கோப்பை வெல்ல தனி பொறுப்பு வழங்க வேண்டும் என  குறிப்பிட்டு உள்ளார். 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் கௌதம் கம்பீர் தான் இந்திய அணியின் ஆங்கர் ரோலில் செயல்பட்டதாக குறிப்பிட்ட ஸ்ரீகாந்த் அதேபோன்ற ஒரு பணியை விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -

விராட் கோலி இன்னிங்ஸ் முழுவதும் பொறுமையாக நின்று விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டால் மறுபுறத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட வாய்ப்பு ஏற்படும் எனவும் அவர் யோசனை கூறியுள்ளார். ஒவ்வொரு வீரர்களுக்கும் தனியாக இது போன்ற பொறுப்புகளை வழங்கினால் இந்திய அணி நிச்சயம் உலக கோப்பையை வெல்லும் என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Published by