டி20 உலக கோப்பை வெல்ல தென்னாப்பிரிக்காவுக்கு அதிக வாய்ப்பு.. டிவில்லியர்ஸ் கருத்து

0
51

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ்க்கு உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர்.அதற்கு காரணம் அவருடைய அதிரடி ஆட்டம் தான். இந்த நிலையில் இந்தியாவில் உள்ள வசதி இல்லாத குழந்தைகளுக்கு டிவில்லியர்ஸ் உதவி செய்வதாக முன்வந்துள்ளார்.இது தொடர்பான நிகழ்ச்சியில் டிவில்லியர்ஸ் இடம் கிரிக்கெட் தொடர்பாக பல கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது விராட் கோலி பார்மில் இல்லாமல் இருப்பது குறித்து கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த டிவில்லியர்ஸ், விராட்கோலி ஃபார்மல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி அவர்தான் உலக கிரிக்கெட்டில் சிறந்த வீரராக விளங்குகிறார்.

- Advertisement -

ரன் வராத நேரத்தில் கடுமையாக உழைக்க வேண்டும் என்று நான் சொல்லி தான் விராட் கோலிக்கு தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. விராட் கோலியை பொறுத்தவரை பார்ம் தற்காலிகமானது தான் ஆனால் திறமை எப்போதுமே இருக்கும் என்று டிவில்லியரா பாராட்டினார்.

டி20 கிரிக்கெட் தற்போது அசுர வளர்ச்சி அடைந்து வருவதாக குறிப்பிட்ட டிவிலியர்ஸ், இதனால் மற்ற வகை கிரிக்கெட்டுக்கு ஆபத்து இருப்பது உண்மைதான் என்று கூறியுள்ளார். டி20 கிரிக்கெட்டுக்காக இருத் தரப்பு கிரிக்கெட் தொடரை நிறுத்துவது முறையல்ல என்று சுட்டிக்காட்டி உள்ள டிவில்லியர்ஸ், இதன் மூலம்தான் பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு வருமானம் கிடைப்பதாக டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

சூரியகுமார் யாதவ் தம்மை போல் விளையாடுவதாக பாண்டிங் பாராட்டியது குறித்து பதில் அளித்த டிவில்லியர்ஸ், சூரியகுமார் யாதவ் ஒரு ஸ்பெஷல் வீரர் என்றும் அவர் நன்றாக விளையாடுவதாக பாராட்டினார்.எனினும் மற்றவர் போல் ஒப்பிட்டு செய்யாமல் அவர் அவராகவே இருக்க விரும்புகிறேன் என்று டிவில்லியர்ஸ் பதிலளித்துள்ளார்.

- Advertisement -

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை யார் வெல்வார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டிவில்லியர்ஸ், தென்னாப்பிரிக்கா அணி தற்போது பேட்டிங்,பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டினார்.ஆஸ்திரேலிய போன்ற ஆடுகளங்களில் தென்ஆப்பிரிக்கா வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதால் அந்த அணிக்கே உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகம் இருப்பதாக டிவில்லியர்ஸ் கூறினார்.