கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் தென்னாபிரிக்கா மற்றும் சிஎஸ்கே வீரர் டுவைன் ப்ரெடோரியஸ்!

0
309

தென்னாபிரிக்கா வீரர் டுவைன் ப்ரெடோரியஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆல்ரவுண்டர் டுவைன் ப்ரெடோரியஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில்,

- Advertisement -

“நான் இனி முழுக்க முழுக்க டி20 லீக் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளேன்.மீதமுள்ள என் கிரிக்கெட் வாழ்க்கையை அதற்காக செலவழிக்க உள்ளேன். 10-ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவேன். எனது உடல்நிலை மற்றும் காயத்தை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவை எடுத்துள்ளேன்.” என தனது ஓய்வு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தென்னாபிரிக்கா அணிக்காக சில ஆண்டுகள் முன்னணி ஆல்ரவுண்டராக இருந்து வந்த ப்ரெடோரியஸ், 30டி20 போட்டிகள், 27 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 77 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

தென்னபிரிக்காவிற்காக 2 உலககோப்பையில் பங்கேற்றுள்ள ப்ரெடோரியஸ், தென்னாபிரிக்காவின் சிறந்த டி20 பவுலிங்கை தன்வசம் வைத்திருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக இவர் 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் கைப்பற்றியது தென்னாபிரிக்காவின் சிறந்த டி20 பவுலிங் ஆக இருக்கிறது.

- Advertisement -

தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், கரீபியன் ப்ரீமியர் லீகிலும், சவுத் ஆப்ரிக்கா டி20 லீகில் டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காகவும், 100 பந்துகள் கொண்ட ‘தி ஹண்ட்ரட்’ லீகில் வேல்ஸ் பயர் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.