இதுவரை எந்த இந்திய கேப்டனும் செய்திராத சாதனையை படைத்த ஷிகர் தவான்!! தோனி கூட செய்ததில்லையாம்..

0
65

மேற்கிந்திய தீவுகள் அணியை 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் வீழ்த்தியதன் மூலம் கேப்டன் பொறுப்பில் புதிய வரலாற்றுச் சாதனையை படைத்திருக்கிறார் ஷிகர் தவான்.

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல்கட்டமாக விளையாடியது. கேப்டன் ரோகித் சர்மா ஓய்வில் இருந்ததால், இந்த தொடரில் ஷிகர் தவான் கேப்டன் பொறுப்பினை ஏற்று விளையாடினார். முதல் இரண்டு போட்டிகள் முறையே இந்திய அணி மூன்று ரன்கள் மற்றும் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரையும் கைப்பற்றியது. 

- Advertisement -

இந்நிலையில் மூன்றாவது போட்டி 27ஆம் தேதி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 115 ரன்கள் அடித்திருந்தபோது, ஆட்டம் மழையின் காரணமாக தடைப்பட்டது. அதன் பின்னர் துவங்கிய ஆட்டத்தில் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் மிக சிறப்பாக விளையாடினர். கில் 98 ரன்களும் ஷ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களும் அடித்திருந்தனர். 36 ஓவர்கள் முடிவில் 225/3 ரன்கள் இந்திய அணி அடித்திருந்தது.

மீண்டும் மழை வந்ததால் போட்டி பாதியிலேயே தடைப்பட்டது. அதன் பிறகு விதிமுறைப்படி ஆட்டம் 36 ஓவராக குறைக்கப்பட்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 257 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 119 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இதுவரை மேற்கத்திய தீவுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாடிய ஒருநாள் தொடர்களில் ஒருமுறைகூட அனைத்து போட்டிகளையும் வென்றதில்லை. முதல் முறையாக தவான் தலைமையிலான இந்திய அணி இத்தகைய சாதனை படைத்திருக்கிறது இதன் மூலம் முதல் முறையாக இந்த சாதனையை படைத்தவர் என்ற பெருமைக்கு தவான் சொந்தக்காரர் ஆனார்.

- Advertisement -

இதற்கு முன்னதாக இலங்கை அணிக்கு எதிராக ஷிகர் தவான் ஒருநாள் போட்டிகளில் கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாடினார். அந்த தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது. 

ஒருநாள் தொடருக்கு பிறகு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற ஜூலை 29ஆம் தேதி துவங்க இருக்கிறது இதற்கான இந்திய வீரர்கள் ஏற்கனவே மேற்கிந்திய தீவுகளுக்கு வந்து இறங்கி விட்டனர்.