இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் பிசிசிஐ செய்யும் ஒரு விஷயம் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது கிடையாது என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக உள்நாட்டில் விளையாடுகிறது. இந்த தொடர் முடிவடைந்ததும் அக்டோபர் மாதம் மத்தியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உள்நாட்டில் மீண்டும் விளையாடுகிறது.
இந்திய அணியின் டெஸ்ட் சீசன்
இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகளை உள்நாட்டில் விளையாடிவிட்டு அடுத்து ஐந்து டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் விளையாடுகிறது. இதனால் இந்திய அணிக்கு நீண்ட ஒரு டெஸ்ட் சீசன் அமைந்திருக்கிறது.
எனவே இதற்கு வீரர்கள் தயாராகும் விதமாக உள்நாட்டு சிவப்பு பந்து தொடர்களுக்கு இந்திய வீரர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் விளையாட வைத்தது. இது சிறந்த முடிவாக பார்க்கப்பட்டது. அதே சமயத்தில் இந்திய மூத்த பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் இந்திய கிரிக்கெட் உள்நாட்டுக்கு கிரிக்கெட் விளையாடுவதில் விலக்கு கொடுத்தது. இதுதான் தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது கிடையாது
இதுகுறித்து பேசி இருக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது “உள்நாட்டு சிவப்பு பந்து தொடர்களில் சிலர் விளையாடி இருந்தால் அவர்கள் நன்றாக இருந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். துலிப் டிராபியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடலாமா? வேண்டாமா என்பது அவர்களது கையில் இருந்தது. இப்படி வீரர்களை வித்தியாசமாக நடத்துவதில் கவனமாக இருக்க வேண்டும், இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்ததை செய்ய வேண்டும்”
“விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் துலீப் டிராபியில் விளையாடாதது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயம் கிடையாது. அவர்கள் அந்தத் தொடரில் விளையாடி இருந்தால், அவர்களுக்கு கொஞ்சம் விளையாட்டு நேரம் கிடைத்திருந்தால், விஷயங்கள் வித்தியாசமானதாக இருந்திருக்கலாம்”
இதையும் படிங்க : எங்க ஆஸ்திரேலியா டீம்ல.. இந்த இந்திய பையன் இருந்தா செமையா இருக்கும் – ஹெட் மார்ஸ் விருப்பம்
“இவர்கள் இருவருமே தங்களுடைய சிறப்பான நிலைக்கு திரும்பி வந்து விடுவார்கள். அதற்கான கிளாஸ் மற்றும் எக்ஸ்பீரியன்ஸ் அவர்களிடம் இருக்கிறது. உள்நாட்டு தொடரில் விளையாடாததால் இவர்கள் பார்மில் இல்லை என்று நான் கூறவில்லை. சில வீரர்களுக்கு சலுகை காட்டுவது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது கிடையாது என்று சொல்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.