மறந்துபோச்சா? இன்று அகர்கர் தேர்வாளராக இருப்பதற்கே காரணம் அவர்தான்… சஞ்சு நீக்கத்தில் சடகோபன் ரமேஷ் சாடல்

இந்திய அணியின் ஜிம்பாப்வே டி20 தொடருக்கான அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது மீண்டும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவை முன்னாள் இந்திய தொடக்க வீரர் சடகோபன் ரமேஷ் மிகவும் கடுமையாக விமர்சித்து, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மீது நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு தனது இடத்தை இழந்தார். அதன்பின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த முடிவு ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை சாதனையை மறந்துவிட்டார்களா?

சடகோபன் ரமேஷ் கூறுகையில், டி20 உலகக் கோப்பையில் இந்தியா கோப்பையை வெல்வதில் சஞ்சு சாம்சனின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றார். அந்த தொடரில் தொடர்நாயகன் விருதை வென்ற வீரரை, வெறும் மூன்று மோசமான இன்னிங்ஸ்களின் அடிப்படையில் அணியிலிருந்து நீக்குவது சரியான அணுகுமுறை அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகே அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது என்பதையும் ரமேஷ் நினைவூட்டினார். அந்த வெற்றியில் சஞ்சுவின் பங்களிப்பை மறந்துவிட்டு அவரையே அணியில் இருந்து நீக்கியிருப்பது நியாயமற்ற முடிவு என்றும் அவர் தெரிவித்தார்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் போன்ற அனுபவமிக்க வீரரை சில தோல்வியான இன்னிங்ஸ்களை மட்டும் வைத்து மதிப்பிடக் கூடாது என்பதே ரமேஷின் கருத்தாகும். இந்திய அணியின் தேர்வு குறித்து ஏற்கனவே பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், ஜிம்பாப்வே தொடரை முன்னிட்டு இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -
Published by

Recent Posts