ரோகித் சர்மா புதிய உலக சாதனை.. 13 ஆண்டுகள் கழித்து மற்றும் ஒரு ODI அசத்தல் ரெக்கார்ட்!

0
2956
Rohit

இந்தியாவின் ராஜ்கோட் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு வாரனர், மார்ஸ், ஸ்மித் லபுசேன் நால்வரும் அதிரடி சதங்கள் அடிக்க, ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது.

- Advertisement -

போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ராஜ்கோட் மைதானத்தில் ஒரு அணி பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோராக தற்போது ஆஸ்திரேலியா அணி பதிவு செய்த 352 ரன்கள் அமைந்திருக்கிறது.

இந்த நிலையில் பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக கேப்டன் ரோஹித் சர்மா உடன் வாஷிங்டன் சுந்தர் துவக்க வீரராக அனுப்பப்பட்டார்.

ஒரு முனையில் வாஷிங்டன் சுந்தர் மிகவும் பொறுமையாக விளையாடிக் கொண்டிருக்க, மறுமுனையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி சரவெடி கொளுத்தினார்.

- Advertisement -

அவரது பேட்டில் பட்ட பந்துகள் தரையிலும் காற்றிலும் பவுண்டரி லைனை தாண்டி ஓடிக் கொண்டிருந்தன. அவர் 31 பந்துகள் விளையாடி மூன்று பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸ்ர்கள் உடன் அரை சதத்தை நிறைவு செய்தார்.

இதன்மூலம் 13 ஆண்டுகள் கழித்து ஒருநாள் கிரிக்கெட் பவர் பிளேவில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்கின்ற சாதனையைப் படைத்திருக்கிறார். மேலும் பவர் பிளேவில் முதல்முறையாக 5 சிக்ஸர்கள் அவர் அடித்திருக்கிறார்.

அதே சமயத்தில் நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் செய்திருந்த உலகச் சாதனையை உடைத்து புதிய உலகச் சாதனையைப் படைத்திருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் ஒரு நாட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்தியாவில் 261 சிக்ஸர்கள் அடித்து ரோகித் சர்மா புதிய உலக சாதனைக்கு சொந்தக்காரராக மாறியிருக்கிறார்.

இந்தப் பட்டியலில் நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் 256 சிக்ஸர்கள், பிரண்டன் மெக்கலம் 250 சிக்ஸர்கள் நியூசிலாந்தில் அடித்து அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.