100 இல்ல 200 சதவீதம்.. பும்ரா வீசுறப்போ பதட்டமா இருந்துச்சு.. அப்போ இவர்தான் ஹெல்ப் பண்ணாரு – ஆர்சிபி அனுஜ் ராவத் பேட்டி

0
47

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா உலக கிரிக்கெட்டின் சிறந்த பந்துவீச்சாளராக திகழ்கிறார். சமீபத்தில் இந்தியா டி20 உலக கோப்பை வென்றதற்கு இவரது பந்து வீச்சு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடும் இளம் இந்திய வீரர் ஒருவர் பும்ராவின் பந்துவீச்சை கண்டு பதட்டம் அடைந்ததாக சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு அரிதலும் அரிதான ஒரு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா தற்போது திகழ்ந்து கொண்டிருக்கிறார். மிகத் துல்லியமான பேட்ஸ்மேன்களே இவரது பந்துவீச்சை கணித்து விளையாடுவதில் மிகுந்த சிரமம் அடைவார்கள். அந்த அளவிற்கு இவரது லைன் அண்ட் லெந்த் மற்றும் வேரியேஷன் என அனைத்திலும் வித்தியாசம் காட்டுவார்.

இவரது பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று அனைவரும் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் ஆர்சிபி அணியின் இளம் வீரரான அனுஜ் ராவத் முதல்முறையாக பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடிய போது 200 சதவீதம் பதட்டம் அடைந்ததாகவும் அதற்கு ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் ஆதரவு பெரிய அளவில் இருந்ததாகவும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக எங்கள் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் சார் என்னை அழைத்துப் பேசினார் அப்போது அவர் ‘பும்ரா உங்களுக்கு எப்படி பந்து வீசப் போகிறார் என்று நினைக்கிறீர்கள்? அவர் என்ன செய்வார்? என்று கேட்டார். அதற்கு ‘நான் அவர் பந்தை ஃபுல் லெந்தாக வீசுவார், பந்தை ஃப்ளிக் செய்யக்கூடிய நீளத்தில் அது இருக்கும்’ என்று கூறினேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு சென்றார்.

ஆனால் எனக்கு கால்களை நோக்கி யார்கர் பந்துகளை வெளிப்படுத்தினார். ஆனால் நான் அதை இரண்டு ரன்களுக்கு மாற்றி விட்டேன். அந்தப் போட்டியில் விளையாடி நான் அடித்த அரைசதம் எனக்கு பெரிய நம்பிக்கையை அளித்தது. நான் விளையாட சென்ற போது சிறப்பம்சமாக விராட் கோலி நான் ஸ்ட்ரைக்கர் என்டில் இருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே நான் மூன்று முதல் நான்கு போட்டிகளை விளையாடியதால் அது எனக்கு செட்டில் ஆகி விளையாட நல்ல நம்பிக்கையை அளித்தது.

இதையும் படிங்க:பங்களாதேஷ் டெஸ்ட்.. இந்த 2 இந்திய ஸ்டார் வீரர்கள் வேண்டாம்.. இதான் பிளேயிங் XI – ஆஸி பிராட் ஹாக் பேட்டி

நான் பும்ராவை இதற்கு முன்னதாக சந்தித்ததில்லை அப்போது நான் பதட்டமாக இருந்தேன். அந்தப் பதட்டம் ஒரு 200 சதவீதம் அளவுக்கு இருக்கும் என்பதை உணர்கிறேன். ஆனால் சொன்னது போலவே பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் என்னை தயார்படுத்தினார். அதற்குத் தகுந்தவாறு நானும் செட்டில் ஆகிவிட்டேன். நிச்சயமாக பும்ரா உள்ளே வரும்போது ஒரு விதமான பதட்டம் ஏற்படும்” என்று கூறி இருக்கிறார். அந்தப் போட்டியில் ராவத் 47 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் உட்பட 64 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -