மரியாதை குறைவா பேசல.. முன்ன மாதிரி இல்லாம.. இப்போ இந்திய பிளேயர்ஸ் தரமா வர இதுதான் காரணம் – டிராவிட் பேட்டி

0
381

இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் சமீபத்தில் டி20 உலக கோப்பையை வென்று மிகப்பெரிய சாதனை படைத்தது. அப்போது இந்திய அணியில் அனுபவமும், இளமையும், தரமும் கலந்த இந்திய வீரர்கள் இருந்தனர்.

இந்த சூழ்நிலையில் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு கிடைக்கும் திறமையான வீரர்கள் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அதிக மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய நாடான இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் முன்பெல்லாம் திறமையான வீரர்கள் பெரிய நகரங்களில் இருந்து மட்டுமே வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதனால் இந்திய அணிக்கு விளையாடும் 11 வீரர்களை தவிர பெஞ்ச் ஸ்ட்ரென்த் என்பது சற்று குறைவாகவே இருந்தது.

ஆனால் தற்போது நவீன கிரிக்கெட் மற்றும் தொழில்நுட்பத்தின் வரவால் சிறிய நகரங்களில் இருந்து திறமையான வீரர்கள் கிடைப்பதன் மூலமாக இந்தியாவில் தரமான மூன்று சர்வதேச அணிகளை உருவாக்க கூடிய அளவுக்கு திறமையான இளம் வீரர்கள் இருக்கிறார்கள். இதனை இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளராக திகழ்ந்த ராகுல் டிராவிட் பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து டிராவிட் விரிவாக கூறும்போது “தற்போதைய சூழலில் இந்திய கிரிக்கெட்டை பார்த்தால் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், வலிமையானதாகவும் இருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம் திறமை நாட்டின் எல்லா இடங்களில் இருந்தும் வருகிறது. குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் ரஞ்சி டிராபியின் தரத்தை பாருங்கள். தென் மண்டலத்தில் முன்பு தமிழ்நாடு மற்றும் ஹைதராபாத் அணிகளில் விளையாடுவதை தவிர மற்ற அணிகளை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அதை மரியாதை குறைவாக நான் சொல்லவில்லை. ஆனால் சவுத் ஜோனில் நீங்கள் தோற்கடிப்பதற்கு சவுரியமாக இருக்கும் அணி என்று எந்த அணியும் தற்போது தென் மண்டலத்தில் இல்லை.

கிரிக்கெட் என்பது அனைவருக்கும் பொதுவானதாக சமத்துவமாக இருக்க வேண்டும். திறமை எல்லா இடங்களில் இருந்தும் வர வேண்டும். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் கிரிக்கெட் கிளப்பில் பயிற்சிக்குப் பிறகு கிளப் இரண்டு முட்டை மற்றும் பால் கொடுக்கும். அந்த முட்டை மற்றும் பாலை விட பயிற்சியாளர்களான பி கே குமார் மற்றும் நந்தன் ஆகியோர் கிரிக்கெட் குறித்து பேசுவது மிகவும் உதவிகரமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும்.

இதையும் படிங்க:வெறும் 8 சிக்ஸ் தேவை.. டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் எட்டாத சாதனை.. ஜெய்ஸ்வாலுக்கு வங்கதேச தொடரில் வாய்ப்பு

டிராவிட் கூறியதைப் போலவே தற்போது இந்தியாவில் அதிக அளவு திறமையான இளம் வீரர்கள் வருவதற்கு ஆரம்பித்துள்ளனர். உதாரணமாக தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் ஜம்முவைச் சேர்ந்த உமரான் மாலிக் போன்ற சிறிய இடத்தில் இருந்தும் திறமையான வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இனிவரும் காலங்களில் இந்திய கிரிக்கெட் சர்வதேச தரம் நிலைத்து நிற்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை

- Advertisement -