ஒருநாள் தொடரில் புதிய ட்விஸ்ட்.. இந்தியாவுக்கு தலைவலியை தரும் வகையில் ஆஸி., அணியில் திடீர் மாற்றம்!

0
3443

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பேற்று விளையாட உள்ளார். பாட் கம்மின்ஸ் வரமுடியவில்லை என்கிற தகவல்கள் வந்திருக்கிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடர் முடிவடைந்து இருக்கிறது. இதில் தொடர்ந்து நான்காவது முறையாக இந்திய அணி இந்த டிராபியை கைப்பற்றியது.

- Advertisement -

2-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய வரலாறு படைத்த இந்திய அணி, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கே உள்ளது. வருகிற 17-ஆம் தேதி துவங்கி 22ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆஸ்திரேலியா அணியும் அறிவிக்கப்பட்டு விட்டது.

ஆஸி., அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை முடித்துவிட்டு ஆஸ்திரேலியாவிற்கு சென்றார். அவரது தாயாரின் உடல்நிலை மோசமாக இருந்ததால் பார்க்கச்சென்றார்.

துரதிஷ்டவசமாக 4வது டெஸ்டின்போது, தாயார் மரணித்துவிட்டார். ஆகையால் இரண்டு போட்டிகளிலும் பாட் கம்மின்ஸ்-க்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார்.

- Advertisement -

தாயார் மறைவின் துயரத்தில் இருந்து மீளாத கம்மின்ஸ், ஒருநாள் தொடரிலும் பங்கேற்கவில்லை என்ற தகவல்கள் வந்திருக்கிறது. தொடர்ந்து ஒருநாள் போட்டிகளுக்கும் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பேற்று விளையாட உள்ளார் என்றும் அணி நிர்வாகத்தின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸி., இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டது. ஆகையால் ஒருநாள் தொடரில் செய்யப்பட்டிருக்கும் இந்த மாற்றமும் அந்த அணிக்கு நன்றாக எடுபடலாம். இந்திய அணிக்கு பெருத்த தலைவலியை கொடுக்கலாம்.

இந்திய அணியை பொறுத்தவரை, ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குணமடைவதற்கு இன்னும் கால அவகாசம் தேவை என்று அறிவுறுத்தினர்.

இதன் அடிப்படையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார். விரைவில் மாற்றுவீரர் அறிவிக்கப்படும் என்ற தகவல்கள் பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல்கள் வந்திருக்கிறது.

மேலும் ஐபிஎல்-இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்துவரும் ஷ்ரேயாஸ் ஐயர், துவக்கத்தில் சில போட்டிகள் விளையாட மாட்டார் என்று தெரிய வந்திருக்கிறது. இது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் தொடர்ந்து பேச்சு வார்த்தையும் கண்காணிப்பையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.