நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அபார சதம் அடித்து ராஜஸ்தான் அணியை வெற்றி பெற வைத்த 14 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்சி தற்போது பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா வைபவை பாராட்டும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பாராட்டு மழையில் வைபவ்
தற்போதைய ஐபிஎல் உலகில் ஹாட் டாபிக்காக பேசப்படும் 14 வயது இளம் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்சி நேற்றைய குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் மூலமாக அபார சதம் அடித்து அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார். குஜராத் அணி நிர்ணயித்த 209 ரன்கள் இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் அணி வைபவின் அதிரடியான தொடக்கத்தின் மூலமாக வெற்றி இலக்கை எளிதாக வென்றது.
மொத்தமாக 35 பந்துகளை மட்டுமே ஏற்றுக் கொண்ட வைபவ் 7 பவுண்டரி மற்றும் 11 சிக்ஸர் என 101 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதன் மூலமாக பல்வேறு சாதனைகளை அவர் படைத்திருக்கும் நிலையில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா சமூக வலைதளத்தில் “இளம் வீரருக்கு சல்யூட், திறமை இளம் வைபவ் சூரியா வாவ்” என்று பதிவினை வெளியிட்டு இருந்தார். மேலும் லக்னோ அணிக்கு எதிராக அறிமுகமான முதல் போட்டியில் 34 ரன்கள் குவித்த போது வைபவை நேரடியாக சந்தித்த சஞ்சீவ் கோயங்கா சில நிமிடங்கள் பேசி தன் அன்பினை வெளிப்படுத்தினார்.
6 வயது வைபவுக்கு நன்றி
இந்த சூழ்நிலையில் அவரது சதத்தை பாராட்டி எழுதிய சில மணி நேரங்களிலேயே தனது முன்னாள் ஐபிஎல் அணியான ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு வைபவ் ஆதரவு அளிப்பதை கண்டு மற்றொரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் ” நேற்று இரவு அவரது சதத்தை நான் பிரம்மிப்புடன் பார்த்தேன். இன்று காலை 2017 ஆம் ஆண்டு அப்போது எனது அணியான ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ஸ்க்கு 6 வயது இளம் வைபவ் சூரியவன்சி உற்சாகப்படுத்தும் புகைப்படத்தை பார்த்தேன். நன்றி வைபவ் வாழ்த்துக்கள் மற்றும் நிறைய ஆதரவு” என்று வெளியிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க:என் தம்பி விராட் கோலியை விமர்சனம் செய்யும் முன்.. உங்க வரலாறை பாருங்க.. சஞ்சய் மஞ்ச்ரேக்கரை விமர்சித்த கோலியின் சகோதரர்
அதாவது 2017ம் ஆண்டு சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட நிலையில் அப்போது விளையாடிய சஞ்சீவ் கோயங்காவின் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு வைபவ் தனது தந்தையுடன் ராஜஸ்தான் ஜெர்சியில் ஆதரவு அளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தான் லக்னோ உரிமையாளர் அந்த புகைப்படத்தை பகிர்ந்து தனது நன்றியை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்போது புனே அணிக்காக எம்எஸ் தோனி விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.