தங்களது அம்மாவின் பெயர் பொறித்த புதிய ஜெர்சியுடன் களமிறங்கும் லக்னோ அணி – காரணம் இதுதான்

0
1465
Lucknow Supergiants new jersey

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் போட்டி நடந்து முடிந்த பின்னர் இன்று இரவு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருக்கின்றது.

அந்தப் போட்டியில் லக்னோ அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட ஜெர்சியை அணிந்து விளையாட போகின்றனர். ஒவ்வொரு வீரருடைய அன்னையின் பெயர் அந்த ஜெர்சியில் பொறிக்கப்பட்டிருக்கும். தங்களுடைய அன்னையின் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்து கொண்டு இன்று லக்னோ அணி வீரர்கள் களம் இறங்க போகின்றனர்.

- Advertisement -
உலக அன்னையர் தினத்தை கொண்டாட இந்த ஏற்பாடு

ஒவ்வொருவரிடத்திலும் மே மாதத்தில் அன்னையர் தினம் கொண்டாடப்படும். மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாக ஏற்றுக் கொண்டு உலகில் உள்ள அனைவரும் கொண்டாடுவார்கள். அதன்படி நாளை உலக அளவில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது.

அன்னையர் தினத்தை கொண்டாடும் விதத்தில் இன்று லக்னோ அணி வீரர்கள் அனைவரும் தங்களுடைய அன்னையின் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்து கொண்டு விளையாட இருக்கின்றனர். லக்னோ அணி வீரர்கள் எடுத்த இந்த முடிவு ரசிகர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த ஏற்பாடு குறித்து ரசிகர்கள் அனைவர் மத்தியிலும், சமூக வலைத்தளத்தில் மிகப் பெரிய பாராட்டுக்கள் குவிந்து வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இடத்திற்கு முன்னேறுமா

புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 10 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி 7இல் வெற்றிபெற்று தற்பொழுது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. இன்று இரவு கொல்கத்தா அணிக்கு எதிராக அந்த அணி வெற்றி பெறும் பட்சத்தில் முதல் இடத்திற்கு முன்னேறும். அதே சமயத்தில் கிட்டத்தட்ட பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். எனவே இன்றைய போட்டியில் லக்னோ வெற்றி பெற்று முதல் இடத்திற்கு முன்னேறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -