இலங்கை அணிக்கு எதிரான தொடருக்குப் பிறகு இந்திய அணி சற்று நீண்ட ஓய்வில் இருந்து வருகிறது. இதற்குப் பிறகு வங்கதேச அணியுடன் டெஸ்ட் தொடர் அதற்குப் பிறகு நியூசிலாந்து டெஸ்ட், பின்னர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் என தொடர்ச்சியான விளையாட்டில் இந்தியா ஈடுபட இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்தியாவில் சிறந்த பிட்டான வீரர் யார் என்று பும்ராவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.
இந்தியாவில் சிறந்த வீரர்கள் என்றால் நினைவுக்கு வருவது பந்து வீச்சை காட்டிலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை பெரும்பாலும் நினைவுக்கு வருவார்கள். அதிலும் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி விராட் கோலி, ரோஹித் சர்மா என எடுத்ததும் முதலில் நினைவுக்கு வரக்கூடிய வீரர்கள் இவர்கள்தான். பந்துவீச்சாளர்களை எடுத்துக் கொண்டால் மிகக் குறைவான வீரர்களே நினைவுக்கு வருவார்கள்.
எடுத்துக்காட்டாக இந்திய அணியின் பந்துவீச்சில் ஜாகிர் கான் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறார். அவருக்கு பிறகு தற்போது உலகின் சிறந்த பந்துவீச்சாளராக கருதப்படும் பும்ரா தற்போது முதன்மையான வீரராக இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பும்ராவிடம் இந்தியாவின் சிறந்த பிட்டான கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு உலகமே தற்போது அறியப்படும் விராட் கோலியின் பெயரை குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பும்ரா தனது பெயரையே சிறந்த வீரராக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “நீங்கள் தேடக்கூடிய பதில் எனக்கு தெரியும். இருந்தாலும் நான் ஒரு வேகப்பந்துவீச்சாளர் என்பதால் எனது பெயரை சொல்ல விரும்புகிறேன். நான் இந்திய அணியில் சிறிது காலமாக விளையாடுவதால் இந்தியாவில் இந்த வெப்ப சூழ்நிலையில் நாட்டுக்காக ஒரு வேகப்பந்துவீச்சாளராக இருக்க நிறைய விஷயங்கள் தேவைப்படுகிறது. எனவே நான் எப்போதும் வேகப்பந்து வீச்சாளர்களையே ஊக்குவிப்பேன்.
மேலும் அவர்களது பெயரையே எப்போதும் கூறுவேன்” என்று கூறி இருக்கிறார். தற்போது இந்தியாவின் மிகச் சிறந்த வீரராக கருதப்படும் விராட் கோலி பேட்டிங்கில் மட்டுமல்லாமல் உடற் தகுதியை பிட்டாக வைத்துக் கொள்வதிலும் சிறந்த வீரராக இருக்கிறார். இவர் இந்திய அணியின் கேப்டனான பிறகுதான் யோ யோ டெஸ்ட் முறையை இந்தியாவில் கட்டாயமாக்கினார்.
இதையும் படிங்க:177 பந்து.. ரியான் பராக் கூட விளையாடியே செக் வைத்த திலக் வர்மா.. அட்டகாசமான சதம்.. துலீப் டிராபி 2024
டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என எந்த வடிவத்த தொடராக இருந்தாலும் அதற்கு ஏற்றவாறு தன்னை பிட்டாக வைத்துக் கொள்வதில் விராட் கோலி இன்றைய இளைஞர்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்துவரும் நிலையில் பும்ரா தனது பெயரை குறிப்பிட்டது ரசிகர்கள் மத்தியில் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறலாம்.