7 ரன்னில் முதல் செஞ்சுரி மிஸ்; “ஒரு நிமிஷம் எனக்கு..” இஷான் கிஷன் பேட்டி!

0
207

7 ரன்னில் சதத்தை தவறவிட்ட இஷான் கிசான் போட்டியை முடித்தபிறகு பேட்டி கொடுத்ததை நாம் எங்கே காண்போம்.

இந்தியா-தென்னாபிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் கேஷவ் மஹராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

- Advertisement -

தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களில் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் மார்க்ரம் இருவரும் அரை சதங்கள் அடித்து அணியின் ஸ்கொரை வலுவான நிலைக்கு எடுத்து சென்றனர். பின்னர் வந்த டேவிட் மில்லர் 35(34) ரன்கள் அடித்தார். 50 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 278 ரன்கள் எடுத்தது. இந்திய பந்துவீச்சாளர்களில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றம் அளித்தார்கள். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 161 ரன்கள் குவித்தது. இஷான் கிஷான் துரதிஷ்டவசமாக 93(84) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் நிலைத்து நின்று விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 113(111) ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெறசெய்தார். இது அவரது இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி சதமாகும். அவருடன் கடைசி கட்டத்தில் இணைந்த சஞ்சு சாம்சன் 30(36) ரன்களில் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். தற்பொழுது தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது.

7 ரன்னில் சதத்தை தவறவிட்ட இஷான் கிஷான் போட்டி முடிந்த பிறகு பேசியதாவது:

- Advertisement -

“தொடரை சமன் செய்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் வெற்றியை தீர்மானிக்கும் போட்டி டெல்லியில் நடப்பது மேலும் எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது. இன்றைய தினம் அணிக்காக பங்களிப்பை கொடுத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இது எனது சொந்த மைதானம். பலரும் என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் பீல்டிங் செய்யும் பொழுது என்னிடம் இன்று நீ சதம் அடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். அதற்காகத்தான் நான் நிதானத்துடன் விளையாடினேன். துரதிஷ்டவசமாக சதத்தை தவறவிட்டது வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் ஒட்டுமொத்தமாக இந்திய அணி வெற்றி பெற்றதில் பெருத்த மகிழ்ச்சி. இந்த மைதானம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். பல போட்டிகளை நான் இங்கு விளையாடியதால் அந்த அனுபவம் எனக்கு கை கொடுத்திருக்கிறது. எதிரணியில் ரபாடா, நார்க்கியா போன்ற பந்துவீச்சாளர்கள் வேகமாக வீசினார்கள். ஆனால் பந்து நிதானமாகத்தான் வந்தது. அப்போது நான் வெவ்வேறு திட்டங்களை வகுத்து அதற்கு ஏற்றார் போல் செயல்பட்டேன்.” என்றார.