பாகிஸ்தான் அணியுடன் மோதும் இந்திய அணி விவரம் வெளியானதா? – இந்திய அணியின் இன்ஸ்டாகிராமில் பரபரப்பு!

0
131
Indian team

நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க இருக்கும் 15வது ஆசிய கோப்பை தொடரில், நாளை மறுநாள் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தான் மிக முக்கியமான போட்டியாகக் கருதப்படுகிறது.

இந்தப் போட்டி ஞாயிறு இரவு 8 மணிக்கு துபாய் மைதானத்தில் நடக்கிறது. கடைசியாக இந்தியா-பாகிஸ்தான் அணியோடு இதே மைதானத்தில் தான் டி20 உலக கோப்பையில் மோதி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்திருந்தது. ஒரு உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெற்ற முதல் தோல்வி என்று வரலாற்றில் பதிவானது.

- Advertisement -

தற்போது மீண்டும் இதே மைதானத்தில் அதே பாபர் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருப்பதால் இந்த போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன் அணிகளுக்கும் எப்படியிருக்கும் என்று கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய விவாதங்கள் போய்க்கொண்டு இருக்கிறது. இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் ஆடும் அணியில் இருப்பாரா? அல்லது ரவீந்திர ஜடேஜாவா? இல்லை தீபக் ஹூடாவா? ஆர் அஸ்வின் சாகலோடு இருப்பாரா? என்று பலதரப்பட்ட யூகங்கள் கிளம்பி விவாதிக்கப்பட்டது.

தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 இந்திய வீரர்களின் புகைப்படங்கள் பதிவிட பட்டிருக்கிறது. இது நேற்று கிழமை பாகிஸ்தான் அணியோடு மோதும் இந்திய அணி என்று ரசிகர்கள் கருதுகிறார்கள். இதை நாசுக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள 10 இந்திய வீரர்கள். கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூரிய குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சாகல், அர்ஸ்தீப் சிங் ஆவேஸ் கான்.

தற்போது இதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தான் அணியுடன் ஞாயிற்று கிழமை போதும் இந்திய அணி என்று வேகமாக பரப்பி வருகிறார்கள். மேலும் இதில் பதினோராவது வீரராக யார் இடம்பெறுவார்கள் என்ற விவாதம் தற்போது ஆரம்பித்து இருக்கிறது!