நான் கோச் ஆனதும் கோலி கிட்ட பேசினேன்.. ரோகித் கோலி இதுவரைதான் விளையாடுவாங்க – கம்பீர் பேட்டி

0
775
Gambhir

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கும் கௌதம் கம்பீர் மற்றும் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரும் இலங்கை அணிக்கு இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிப்பதற்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி வருகிறார்கள்.

இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணிகள் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் ருதுராஜ் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் இரண்டு அணிகளிலும் சேர்க்கப்படவில்லை. அதே சமயத்தில் கில் இரண்டு அணிகளிலும் இடம் பெற்றதோடு இரண்டு அணிகளுக்கும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

மேலும் இந்திய டி20 அணியில் இடம் பெற்றதோடு ரியான் பராக் மற்றும் சிவம் துபே இருவரும் இந்திய ஒருநாள் அணிகளிலும் இடம்பெற்று இருக்கிறார்கள். அதே சமயத்தில் இந்திய ஒரு நாள் அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் இருவரும் சேர்க்கப்படவில்லை. மேலும் தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்த சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு ஒருநாள் அணியில் கொடுக்கவில்லை.

மேலும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலி உடனான தனது உறவு எப்படி இருக்கிறது? என்றும், தாங்கள் இருவரும் இணைந்து என்ன செய்யப் போகிறோம்? என்றும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்கள்? என்றும் கவுதம் கம்பீர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து கவுதம் கம்பீர் கூறும் பொழுது “நான் இந்திய அணியின் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டதற்கு பிறகு நானும் விராட் கோலியும் செய்திகளை தொடர்ந்து பரிமாறிக் கொள்கிறோம். எனக்கு அவருடன் நல்ல உறவு மற்றும் மரியாதை இருக்கிறது. அவர் உலகத் தரம் வாய்ந்த தடகள வீரர். மேலும் உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர். இதை நான் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். நாங்கள் இருவரும் எங்கள் அணிக்காக வெற்றி பெற கடுமையாக உழைப்போம். நாங்கள் இந்திய அணியை பெருமைப்படுத்துவோம்.

இதையும் படிங்க : நான் என்ன செய்ய முடியும்?.. ருதுராஜை இதனால்தான் செலக்ட் பண்ணல – அஜித் அகர்கர் தந்த விளக்கம்

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிற்கு இன்னும் நிறைய கிரிக்கெட் மீதம் இருக்கிறது. அவர்கள் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். அவர்களுக்கு உலகின் எல்லா பெரிய அணிகளிலும் இடம் இருக்கும். தற்பொழுது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவை இருக்கின்றன. மேலும் அவர்கள் இருவரும் உடல் தகுதியுடன் இருந்தால் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் விளையாடுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -