இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும் தனக்கும் இடையே இருக்கும் உறவு மிகவும் அற்புதமானது என ரிஷப் பண்ட் கூறியிருக்கிறார்.
மேலும் விளையாடும் காலத்தில் தன்னை அவர் எவ்வாறு விளையாட அனுமதித்தார்? மேலும் தனக்கு பேட்டிங்கில் இருந்த பிரச்சனைக்கு அவர் எவ்வாறு தீர்வு கண்டுபிடித்து கொடுத்தார்? தான் எப்படி விளையாட விரும்புகிறேன்? என்பது குறித்து மனம் திறந்து ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.
தோனியால் வந்த சிக்கல்
இந்திய கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் அறிமுகமான பொழுது அவருக்கு ஏற்பட்ட அழுத்தம் தோனியின் மூலமாக வித்தியாசமாக வந்தது. 20 வயது தொட்ட இளம் வீரராக அவர் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் மகேந்திர சிங் தோனியின் இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது.
இப்படியான எதிர்பார்ப்புகளின் போது அனுபவக் குறைவின் காரணமாக ரிஷப் பண்ட் சில தவறுகள் களத்தில் செய்த பொழுது, அவர் ரசிகர்களால் மிகவும் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் தனி அறையில் கதறி அழுதாகவும் ரிஷப் பண்ட் கூறி இருந்தார். ஆனால் இதை எல்லாம் தாண்டி இன்று தன்னை டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அதிரடி பேட்ஸ்மேனாக புதிய பரிணாமத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ரவி சாஸ்திரி தந்த சுதந்திரம்
இந்த நிலையில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்து பேசிய ரிஷப் பண்ட் கூறும் பொழுது “அது ஒரு அற்புதமான உறவு. எனக்கும் அவருக்கும் இடையே நல்ல புரிதல் சிறந்தது. அவர் நல்ல சுதந்திரத்தை கொடுத்தார். ஒரு குறிப்பிட்ட விஷயத்தை செய்ய வேண்டாம் என்று யாராவது என்னிடம் சொன்னால் எனக்கு அது பிடிக்காது.
அதே சமயத்தில் எனக்கு யாராவது சுதந்திரம் கொடுத்தால் அதை நான் விரும்பக்கூடியவனாக இருப்பேன். ஒரு விஷயத்தை தவிர்த்து விட்டு அதில் இருந்து வெளியேறுவதை விட, நான் அதிலிருந்து சிறந்த ஒன்றை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யக் கூடியவனாக இருக்கிறேன்.
இதையும் படிங்க : இந்திய அணியை ஜெயிச்சா அது நடக்கும்.. நாங்க ஜெயிப்போம்னு இதனால நம்புறோம் – பங்களாதேஷ் பவுலர் பேட்டி
ஒரு சமயத்தில் நான் ஆப் ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடும் பொழுது தொடர்ந்து ஆட்டம் இழந்து கொண்டு இருந்தேன். ரவி பாய் என்னிடம் இதற்கு என்ன சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் நேராக என்னிடம் வந்த அவர் ‘இனி நீ ஆப் பின்னர்களுக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப் அடி’ என்று கூறினார்” என்று தெரிவித்திருக்கிறார்