இலங்கைக்கு எதிரான தொடர்.. 2 இந்திய அணிகள் அறிவிக்க வாய்ப்பு

0
109

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்டு தொடரில் விளையாட இருக்கிறது. டி20 போட்டி வரும் மூன்றாம் தேதி தொடங்க உள்ள நிலையில் அந்தத் தொடருக்கான இந்திய அணியை பழைய தேர்வு குழு உறுப்பினர்களான சேட்டன் சர்மா அறிவிக்க உள்ளது.புதிய தேர்வு குழு உறுப்பினர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்னும் நடைபெறாத நிலையில் பி சி சி ஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

- Advertisement -

ரோகித் காயத்திலிருந்து குணமடைந்து விட்டார்.இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரும் முடிந்து இரண்டு நாட்களிலேயே ஒரு நாள் தொடரும் நடைபெறுகிறது. இதனால் இந்திய அணி தொடர்ந்து ஆறு ஒருநாள் போட்டி விளையாடுவதால் டி20க்கு தனி அணியும் ஒரு நாள் போட்டிக்கு தனி அணியும் உருவாக்க முடிவில் தேர்வுக் குழுவினர் உள்ளனர். இதனால் ரோஹித் சர்மா டி20 போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .

அதற்கு பதிலாக ஹால்டிக் பாண்டியா கேப்டனாக டி20 போட்டிக்கு செயல்படு வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று வங்கதேச டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய உள்ள பல சீனியர்கள் டி20 அணியில் விளையாட வாய்ப்பு இல்லை. அதற்கு பதிலாக ஒரு நாள் தொடர் தொடங்கியவுடன் சீனியர்கள் அணிக்கு திரும்ப உள்ளனர். டி20 அணியில் இஷான் கிஷன், ருத்ராஜ், தீபக் ஹூடா,தீபக்சாகர் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் காயத்திலிருந்து குணமடைந்தாலும் அவர் அணிக்கு திரும்புவது அவசரம் காட்ட பிசிசிஐ விரும்பாத என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முழு உடல் தகுதியை பெரும் வீரர்கள் மட்டுமே இந்திய அணி இடம் பெறுவார்கள். விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப்பண்ட் போன்ற நட்சத்திர வீரர்கள் டி20 அணியில் இடம் பெறுவது சந்தேகமே. எனினும் அவர்கள் ஒருநாள் தொடருக்கு திரும்பி வந்துவிடுவார்கள். ஒரு நாள் தொடரும் முடிந்தவுடன் டி20 போட்டிகள் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற இருக்கிறது. அதில் சீனியர்களுக்கு ஓய்வு வழங்கப்படும். அந்த தொடரும் முடிந்தவுடன் பிப்ரவரி மாதம் மிக முக்கியமான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது.

- Advertisement -