கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

“என்னால முடியாதுனு சொன்னா.. செஞ்சி காட்டுவேன்.. பாருங்க!” – ஆடம் ஜாம்பா சவால் பேச்சு!

கடந்த 46 நாட்களாக கிரிக்கெட் உலகத்தில் இன்றைய நாளுக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் காத்திருந்தார்கள். இன்று 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக 711 ரன்கள் எடுத்திருக்கிறார்.

இதேபோல் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி வெறும் ஆறு போட்டிகளில் அபாரமான முறையில் பந்து வீசி 23 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

ஆஸ்திரேலியா தரப்பை எடுத்துக் கொண்டால் டேவிட் வார்னர் 500 ரன்கள் கடந்தும் மிட்சல் மார்ஸ் 400 ரன்கள் கடந்தும் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன் இந்த உலகக் கோப்பையில் குவித்தவர்களாக முதல் இரண்டு இடத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

அதேபோல் ஆஸ்திரேலியா தரப்பில் பந்துவீச்சில் ஆடம் ஜாம்பா 22 விக்கெட்டுகள் கைப்பற்றி, இந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக விக்கெட் கைப்பற்றியவராகவும், மேலும் அதிக விக்கெட் கைப்பற்றியவர்களில் இரண்டாம் இடத்திலும் இருந்து வருகிறார்.

ஆடம் ஜாம்பா இந்திய சூழ்நிலைகளில் மிகச் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். இதை அவர் பலமுறை நிரூபித்து காட்டி இருக்கிறார். இந்த முறை உலகக் கோப்பை தொடரில் அவருக்கு ஆரம்பத்தில் ஆட்டங்கள் நன்றாக அமையாத போதும் கூட, மீண்டும் திரும்பி வந்த அவர் 22 விக்கெட் கைப்பற்றி இருப்பது அசாதாரணமான விஷயம்.

இறுதிப் போட்டி குறித்து அவர் பேசும் பொழுது “நான் ஒன்றை ஏற்க வில்லை என்று யாராவது நினைத்தாலோ, அல்லது ஒன்றை என்னால் செய்ய முடியாது என்று யாராவது நினைத்தாலோ, நான் அவர்களின் நினைப்பு தவறு என்று நிரூபிப்பதற்கு முயற்சி செய்வேன்.

பின்னர் என்னுடைய இடத்துக்கான செயல்பாட்டை வழங்குவதிலும், ஆஸ்திரேலியாவுக்காக பெரிய போட்டிகளை வெல்ல வேண்டும் என்கின்ற பிடிவாதமும் என்னிடம் இருக்கிறது.

நான் எனது செயல் திறனில் பெருமை கொள்வதோடு, ஆஸ்திரேலியாவுக்காக உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இது என்னுடைய நீண்ட கால விருப்பமாக இருந்து வருகிறது!” என்று கூறி இருக்கிறார்!

Published by