“அவர் மட்டும் ஆடி இருந்தா 2023 உலக கோப்பை இந்தியாவுக்குதானு உறுதியா சொல்லி இருப்பேன்” – ஸ்ரீகாந்த் பேச்சு!

0
3230
Srikanth

2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வைத்து நடத்தப்பட இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி மீது நிறைய அழுத்தங்கள் இருக்கிறது!

இப்படியான நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான பும்ரா, ஸ்ரேயாஸ், ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் காயத்தில் இருப்பது இந்திய அணிக்கு பெரிய நெருக்கடியைக் கொடுப்பதாக இருக்கிறது.

- Advertisement -

2011 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்தவித வடிவத்திலும் இந்திய அணி உலக கோப்பையை வெல்லாததும் பெரிய விமர்சனமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வீரர்களின் காயம் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

தற்பொழுது இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு குழுவின் தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில முக்கியமான கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது
“ரிஷப் பண்ட் பிட்னஸ் பற்றி உண்மையில் என்ன என்று யாருக்கும் தெரியாது. அவர் விளையாடுவதாக இருந்தால் இந்த உலகக் கோப்பையை கைப்பற்றக்கூடிய மிக முக்கியமான அணி இந்தியாதான் என்று சொல்லி இருப்பேன். ஆனால் அவருடைய உடல் தகுதி கேள்விக்குறியாக இருக்கிறது.

- Advertisement -

உலகக் கோப்பைக்கு முன்பு அவர் எவ்வளவு உடல் தகுதியுடன் இருப்பார் என்பது யாருக்கும் தெரியாது. அவர் உலகக் கோப்பையில் விளையாடுவாரா? என்பது பலருக்கும் சந்தேகம். இது எனக்கும் சந்தேகம். இல்லையென்றால் இந்த உலகக் கோப்பையில் அவர் மிக முக்கிய காரணியாக இருந்திருப்பார்.

அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் அணியில் இடம் பிடித்தால் அவரும் ஒரு ஆபத்தான வீரராக இருக்கலாம். இஷான் கிஷான் அணியில் இடம்பெற வேண்டும். மேலும் மிடில் ஆர்டர் இடத்தில் கே.எல். ராகுல் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நமக்குத் துவக்க இடத்தில் ரோகித் மற்றும் கில் இருக்கிறார்கள். இதற்கு அடுத்த இடத்தில் கிங் கோலி இருக்கிறார். இவர்கள் மூன்று பேரும் இந்த கிரிக்கெட் வடிவத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் மேலும் பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார்கள். எனவே இதனால் உலக கோப்பையை வெல்லும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது.

சுப்மன் கில் 2002 முதல் ரன்கள் குவித்து வருகிறார். 2023 ஜனவரி முதல் அவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதங்கள் அடித்து விளசுகிறார். ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் டி20 கிரிக்கெட்டில் சதம் என அவருக்கு நிறைய வந்திருக்கிறது. அவருக்கு இந்த ஆண்டு ஒரு பேட்டிங் பொற்காலம். எனவே இளம் வீரர்களில் இவர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!