“நான் ராகுல் டிராவிட் இடத்துக்கு வந்ததும் இதுக்கு பதில் சொல்றேன்” – பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலி பற்றி அஷ்வின்!

0
518
Ashwin

ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்கு, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி ஆஸ்திரேலியா கிளம்பியது!

இங்கிருந்து சென்ற இந்திய அணி நேராக மேற்கு ஆஸ்திரேலியா சென்று, அந்தப் பகுதியின் பிரதான மைதானமான பெர்த் மைதானத்தில் முகாமிட்டு பயிற்சி செய்தது.

- Advertisement -

அடுத்து மேற்கு ஆஸ்திரேலிய அணியுடன் 2 டி20 பயிற்சி போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நேற்று முதல் பயிற்சி போட்டி நடந்தது.

டாசில் வென்ற ரோகித்சர்மா முதலில் பேட்டிங் செய்ய அறிவித்தார். இதையடுத்து களம் கண்ட ரோகித் சர்மா 3 ரன்கள், ரிஷப் பண்ட் 9 ரன்கள், தீபக் ஹூடா 22 ரன்கள் என வெளியேறினார்கள்.

ஆனால் அடுத்த ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் ஹர்திக் பாண்டியா மிகச் சிறப்பாக விளையாடினார்கள். சூர்யகுமார் யாதவ் 32 பந்துகள் 52 ரன்கள், ஹர்டிக் பாண்டியா 27 ரன்கள் 20 பந்துகள். முடிவில் இந்திய அணி 158 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதையடுத்து களம் கண்ட மேற்கு ஆஸ்திரேலிய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் மற்றும் அர்ஸ்தீப் சிங் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இடம்பெறவில்லை. நேற்று போட்டிக்கு பிறகு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை அஷ்வின் எதிர்கொண்டார். அப்பொழுது அவரிடம் விராட் கோலி ஏன் அணியில் இடம்பெறவில்லை என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் நச்சென்று பதில் தருவதை வாடிக்கையாக வைத்திருக்கும் அஷ்வின் இதற்கும் மிகச் சிறப்பான பதில் ஒன்றை நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

நேற்று பயிற்சி போட்டியில் விராட் கோலி இடம்பெறாதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அஷ்வின் ” நான் ஒருநாள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பொறுப்புக்கு வந்து இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க விரும்புகிறேன். ஆனால் இப்போதைக்கு உங்களுடைய யூகம் என்னுடைய யூகம் போலவே மிகச் சிறப்பாக இருக்கிறது ” என்று கிண்டலாக பதிலளித்தார். அதாவது இதெல்லாம் ராகுல் டிராவிட்டிடம் கேட்க வேண்டிய கேள்வி என்னிடம் கேட்டால் எப்படி என்பதைதான் இப்படி அஷ்வின் நகைச்சுவையாக பதிலளித்தார்.