அவர் வீட்டிலேயே இருக்கலாம் – முன்னாள் துணை கேப்டன் சர்ச்சை கருத்து

0
740
ICT

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையான  முதலாவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது . இதில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில்  பங்களாதேஷ் அணியை வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது . மேலும் இந்திய அணி  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  புள்ளிகள் பட்டியலில்  இரண்டாம் இடத்திற்கும் முன்னேறி உள்ளது.

முன்னதாக  இன்றைய நாள் ஆட்டத்தை துவங்கிய  பங்களாதேஷ் அணியில்  கேப்டன் ‘சக்கிபுல் ஹசனைத் தவிர யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை . இதனால அந்த அணியானது 324 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது . இந்திய அணியின் தரப்பில்  ‘குல்தீப் யாதவ்’  மற்றும் ‘அக்சர் பட்டேல்’  ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ‘உமேஷ் யாதவ்’ மற்றும் :முகமத் சிராஜ்’ ஆகியோர் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இந்திய அணியானது முதல் டெஸ்ட் போட்டியை கைப்பற்றி  தொடரில் முன்னிலை  பெற்றுள்ளது.மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு  கேப்டன் ‘ரோஹித் சர்மா’  அணிக்கு திரும்ப இருப்பதால்  இந்திய அணியின் பேட்டிங் இன்னும் வலுப்படும் . ஆனால்  எந்த வீரரை அடுத்த போட்டியில்  அமர வைப்பது என்பதில்  இந்திய அணி நிர்வாகத்திற்கு சிக்கல் உள்ளது .

நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில்  கேப்டன் ‘கேஎல்.ராகுல்’ மற்றும் விராட் கோலி ஆகியோரை தவிர  மற்ற எல்லா டாப்  ஆர்டர்  பேட்ஸ்மேன்களும்  தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர் . இதனால் எந்த வீரரை நீக்குவது  என்பது தலைவலியாக உள்ளது . சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில்  கே.எல்.ராகுல் தான்  சுமாரான ‘ஃபார்மில்’ உள்ளார் . ஆனால் அவர்  அணியின்  துணை கேப்டனாக இருப்பதால்  அணி நிர்வாகம் அவரை நீக்குமா என்பது கேள்விக்குறி தான்.

இதுகுறித்து  இந்திய அணியின்   முன்னாள் துணை கேப்டனும் ஸ்டார் பேட்ஸ்மேனுமான  ‘அஜய் ஜடேஜா’விடம்  கேட்கப்பட்டது . அதற்கு அவர்  “ரோகித் சர்மா  நடக்க இருக்கும் இரண்டாம் டெஸ்ட் போட்டியிலும்  ஓய்வு எடுத்துவிட்டு  புதிய தொடரில்  அணிக்கு வரலாம்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து மேலும் பேசியுள்ள அவர்  ‘இந்திய அடியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர் . சுப்மண் கில் இந்த போட்டியில் சதம் அடித்துள்ளார் . அவரால் ‘மிடில் ஆர்டரில்’ ஆட முடியும் என்றாலும்  யாரை நீக்கிவிட்டு அவரை ‘மிடில் ஆர்டரில்’ ஆட வைக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார் .

தொடர்ந்து பேசிய அவர்  “பொதுவாக மணிக்கட்டு மற்றும் கையில் ஏற்படும் காயங்கள்  குணமாக 10 முதல் 15 நாட்கள் தேவைப்படும் . அப்படியே அவை குணமானாலும்  ‘பேட்டிங்’ ஆடும்போது சற்று சிரமமாகத்தான் இருக்கும்  முழு பலத்துடன் ஆட முடியாது . இந்திய அணி நிர்வாகம் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வார் என்றாலும், அவர் ஆடுவது உறுதியாக தெரியவில்லை . இதற்கு பதிலாக அவர்  இந்த டெஸ்ட் போட்டியிலும் ஓய்வு எடுத்துவிட்டு  புதிய தொடரில்  முழு உடல் தகுதியுடன்  புத்துணர்ச்சியாக  அணியில் இடம் பெறலாம்” என்று கூறி முடித்தார் .